........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 732

நெஞ்சம் மகிழும் நிதம்!

தந்தனத்தோம் என்று மனம்
தன்னந்தனியாக என்றும்
சிந்தை மகிழ்வதில்லையே – அது
சொந்தம் பல கூடி
இன்பம் பல கண்டு
விந்தை உலகதனில்
நெஞ்சம் மிக மகிழுமே

தன்னந்தனி எழுத்து
ஒன்று சேர்ந்திடாமல்
கன்னல் மொழி தோன்றுமா
இன்னல் காணும் மனம்
ஓன்று கூடி என்றும்
நெஞ்சம் மகிழும் நிதமே

பென்னம்பெரு உலகில்
கண்ணில்காணும் பல
வண்ணக் காட்சிகளுமே
கண்டு களித்திருக்க
நெஞ்சம் மகிழும் நிதமே

மாலை நேரத் தண்மதியும்
வானில் தோன்றும் தாரகையும்
துள்ளி ஓடும் புள்ளி மானும்
தோகை விரிக்கும் கோல மயிலும்
வெள்ளை நிறப் பசுவும்
கள்ளமில்லாப் பிள்ளைச் சிரிப்பும்
காதில் கேட்கும் மழலை மொழியும்
கானம் இசைக்கும் குயிலும்
சின்னஞ்சிறு புள் இனமும்
சின்னக்கதை பேசும் சிட்டுக்குருவியும்
சிலுசிலுக்கும் நீரோடையும்
காற்றில் ஆடும் கனிமரமும்
வாட்டம் கொள்ளும் வேளையிலே
கண்டு கேட்டு இன்புற்று
நெஞ்சம் மகிழும் நிதமே

-சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.

 

 

 

 

 

 

 

m

 

சந்திரகௌரி சிவபாலன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு