........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 746

தொடரும் வாழ்க்கை!

போராட்டத்தின் -
ஒவ்வொரு கிளையாய்
தாவிச் சென்றதில்;
உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி
கிளைகள் தீர்ந்தபாடில்லை;

ஒரு நாளைக் கடப்பதே
போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க
வருடங்களை -
சிரிக்க மறுத்து
சகித்துக் கொண்டே - கடக்கிறோம்.

எதிரே வருபவர்களை யெல்லாம்
தனக்கானவர்களாக எண்ணியும்,
கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் -
நிரந்தர ஆசையில் உயிர்விட்டே
மடிகிறதிந்த மனித இனம்; அதில்
நானும் மாறுபட்டவனாக இல்லை.

அப்பட்டமாய் -
எதுவுமே எனக்கில்லையென்று புரிந்து போனாலும்
வாழ்வதற்கான உயிர்காற்று -
தொண்டையை அடைத்துக் கொள்ள,
ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில்,
ஆசையில் -
நம்பிக்கையில் -
நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம்.

இதில், பெரிதாக சாதித்ததெல்லாம்
எந்த நிலையிலும் -
யார் இறப்பிலும் -
உண்டு.. உறங்கி... சுயநலம் பூண்டதும்,
எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும் போல்
சில உண்டு, என்றாலும் -

மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய
மீண்டும் ஒரு புள்ளியாக -
நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!!

-வித்யாசாகர்.

 

 

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு