........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:84

இப் புத்தாண்டிலாவது உணருமா?

அச்சு ஊடகம்
காட்சி ஊடகம்
எதைத் திறந்தாலும்
கொலை கொள்ளை
கடத்தல் கற்பழிப்பு
நாச வேலைகள்
அத்துமீறல்கள்
அராஜகங்கள்
ஆக்கிரமிப்புகளென
நாள்தோரும்
நெஞ்சைப் பதைக்கும்
செய்திகளாய்
அழிவுச்சக்திகளின்
ஆதிக்கம்!

" ஒரு கன்னத்தில்
அறைந்தால்
மறு கன்னத்தைத்
திருப்பிக் காட்டு"
என்றார் ஏசுபிரான்!
அவரின் போதனைகளைக்
காற்றில் விட்டதின்
விளைவே
இந்நிகழ்வுகளின்
பிரவாகம்!

அஹிம்சையைக்
கடைபிடித்ததுடன் -அதைப்
போதிக்கவும் செய்தார்
மஹாத்மா காந்தி!
இந்தியாவும் கடைபிடித்தது!
அதன் மகத்தான
சாதனையே
இந்தியாவின் விடுதலை!
உலகமே கண்டு
வியந்து போற்றும்
இப் பேருண்மையை
விடுதலைக்காக இன்னும்
போராடிக் கொண்டிருக்கும்
நாடுகள்
இப் புத்தாண்டிலாவது
உணருமா?

-இமாம்.கவுஸ் மொய்தீன்.   

 

m
 

இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.