........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:95

சர்க்கரை நோயே...!

இனிப்பானது
சுவையானது
அனைவருக்கும்
பிடித்தமானது!
லட்டு பூந்தி
மைசூர் பாகு
அல்வா பழங்கள்... எனப்
பல உருவங்களில்
உலா வருது!

விருந்தோம்பலும்
மங்கல நிகழ்ச்சிகளும்
இவையன்றி
இருப்பதில்லை!
தன் இனிப்பாலும்
சுவையாலும்
தானோர் 'கொடூரன்'
என்பதை உணராது
செய்து விடும்
தன்மை மிக்கது!

ஒருவர்
தன் வாழ்நாளில்
உட் கொண்ட
சர்க்கரைத் துகள்களைக்
காட்டிலும்
அது உட்கொண்ட
மனித உயிர்கள்
பல மடங்கு!

'இன்சுலின்'
சுரப்பின் குறைபாடே
இந் நோய்க்குக் காரணம்!
உடனே உணர்ந்து
செயல்படா விட்டால்
உடலில்
விழிகள்
சிறுநீரகங்கள்
இதயம்
மூளை
நரம்பு மண்டலமென
ஒவ்வொன்றாய்ப் பாதிக்கும்!

உடலில் தோன்றும்
சிறுபுண் கூட பெரிதாகும்
பீடித்த பகுதியைச்
சிறுகச் சிறுக
அரிக்கும்...பின் அழிக்கும்!
அழிந்த பகுதி
ஒவ்வொன்றாய்
தவணைகளில்
வெட்டி எடுக்கப்படும்!
இறுதியில்
உயிருக்கே உலைவைக்கும்!

நலமும் வளமும்
நிம்மதியும் அழிக்கும்!
ஆன்மாவைச்
சாந்தி அடைய வைத்தே
அது சாந்தி அடையும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

 
m
 

இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.