-
மனிதர்களாகிய நாம் 60 வயதை கடக்கும் பொழுது,
நமது ருசி அறியும் நாக்கின் சுவை மொட்டுகளின் 40
சதவிகிதப் பகுதி அழிந்து போய்விடும்.
-
1844 ஆம் ஆண்டு முதன்
முறையாக தந்தி மூலம் செய்தி அனுப்பப்பட்டது.
-
குண்டூசி எகிப்து நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
-
சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்சில்
இடம் பெற்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி.
-
மூளையில் வலது பக்கம் அதிக சக்தியை
பெற்றிருப்பதால் சில பேருக்கு மட்டும் இடது கைப்பழக்கம்
இயற்கையாக ஏற்படுகிறது.
-
வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக
அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.
-
நெப்போலியன் குதிரைச் சவாரி செய்தவாறே தூங்குவதில் வல்லவர்.
மேலும், மாவீரன் என்று புகழ்பெற்ற அவனுக்குப் பூனையைக் கண்டால் ஒரே பயம்.
-
பெங்களூர் நகர் கெம்பே கௌடாவினால் 1537 -ம்
ஆண்டில் உருவாக்கப்பட்டது . அங்கே தான் 1905 ல் முதல் மின்சார பல்பு எரிந்தது.
-
டால்ஸ்டாய் 67 வயதில்
மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்டார்.
-
டாக்டர் ஆம்ரூஸ் பாரே
என்பவர்தான் அறுவை சிகிச்சையில் தையல் முறையைக் கண்டுபிடித்தவர்.
-
குழந்தையின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்துதான்
உருவாகின்றன.
-
மனிதன் உடம்பில் உள்ள
நரம்புகளை ஒட்டு மொத்தமாக ஒரே நீளத்தில் நீட்டினால் அது
45 மைல் நீளத்திற்கு இருக்கும்.
-
குளிர்ந்த காற்றும் வெப்பக்
காற்றும் சந்திப்பதால் புயல்கள் உருவாகின்றன.
-
இடி மின்னல் நாடு என்று பூடான்
நாட்டை குறிப்பிடுகின்றனர்.
-
"ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை முதன்
முதலில் பயன்படுத்தியவர் தியாகி செண்பகராமன்.
-
உலகில் தலைமுடி
ஏற்றுமதியில் முன்னனியில் உள்ள நாடு சீனாதான்..
-
மிகவும் லேசான உலோகம் லித்தியம்
எனும் உலோகம்தான்.
-
1804 ஆம் ஆண்டில்தான் காகிதம்
தயாரிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
-
மிக அதிக நீள சாலைகள் உள்ள நாடு
பெல்ஜியம்.
-
உலகின் மிகச்சிறிய குடியரசு நாடு
நெளரு குடியரசு.