-
இந்து மதத்திலும், புத்த
மதத்திலும் அரசமரத்தின் இலை சமாதானத்தின் சின்னமாகப் போற்றப்படுகிறது.
-
உலகில் அதிக நீளமுள்ள
கடற்கரையைக் கொண்டுள்ள நாடு ஆஸ்திரேலியாதான். இங்கு 27, 948 கிலோ மீட்டர் நீளம்
கடற்கரையுள்ளது.
-
திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான்
பிரசாதம், லட்டு கிடையாது.
-
சூரியனின் ஒளிக்கதிர்கள்
பூமியை வந்தடைய 6,30,04,000 மைல்கள் பயணிக்கின்றன.
-
ஆங்கிலக் கவிஞர் மில்டன் கண்
பார்வையற்றவர்.
-
உலகில் அதிக அளவில்
முட்டையிடும் உயிரினம் கரையான்.
-
பாகிஸ்தான் முதல் இசுலாமியக்
குடியரசு நாடு.
-
வாத்து அதிகாலையில்தான் முட்டையிடும்.
-
சைமன் பொலிவியர் என்பவர் 1928
ஆம் ஆண்டில் பொலிவியா, பெரு மற்றும் கொலம்பியா என மூன்று நாடுகளுக்கு
குடியரசுத் தலைவராக இருந்தார்.
-
உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 இருக்கின்றன.
-
ஒரு மனிதனுக்கு அவனுடைய
வாழ்நாளில் சராசரியாக 60, 000 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்குத் தேவையாக
இருக்கிறது.
-
இந்தியாவில் முதலில் தமிழில் தான் “பைபிள்”
மொழிபெயர்க்கப்பட்டது.
-
உலகில் 2792 மொழிகள்
பேசப்பட்டு வருகின்றன.
-
சென்னை மாநிலத்தை தமிழ்நாடு
என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்தவர் தியாகி சங்கரலிங்கம்.
-
ஆப்கானிஸ்தானில் ரயில்
போக்குவரத்து இல்லை.
-
தபால்தலையில் நாட்டின் பெயரை
வெளியிடாத நாடு இங்கிலாந்து.
-
இந்தியாவின் முன்னாள்
குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு உலகின் 17 பல்கலைக்கழகங்கள்
டாக்டர் பட்டத்தை அளித்துள்ளன.
-
நத்தையில் ஆண், பெண் பிரிவுகள் கிடையாது. இதற்குக்
கொம்பில்தான் கண்கள் இருக்கின்றன.
-
பீர்பால், தான்சேன்,
தோடர்பால், மான்சிங், ஃபைஜி, அப்துல்ஃபாசல், ரஹீம்கானி-கானன், பகவான்தாஸ்,
மிர்சா அஜிஸ்கோகோ ஆகிய ஒன்பது பேர் அக்பர் அவையின் நவரத்தினங்கள் என்று
அழைக்கப்பட்டனர்.
-
திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனைச்
சாப்பிடமாட்டார்கள்.
-
பிரேசில் நாட்டில் கிடைக்கும் தேன் கசக்கும்.
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒன்பது
வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இல்லாததால் அவரை அவருடைய பெற்றோர்
மூளை வளர்ச்சி குன்றியவராகவேக் கருதினார்கள்.
-
உலகிலேயே அதிகமான மசூதிகள்
துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில்தான் இருக்கின்றன. இங்கு
மொத்தம் 444 மசூதிகள் இருக்கின்றன.