-
அரியானா என்றால் கடவுளின் இருப்பிடம் என்று பொருள்.
-
சமையல் எரிவாயுக்கு இயற்கையில் வாசனை கிடையாது.
-
உலகில் தினமும் 80 லட்சம் மின்னல்கள் தாக்குகின்றன.
-
கேள்விக்குறியை முதன் முதலில் பயன்படுத்திய மொழி லத்தீன்.
-
இத்தாலியில்தான் அடகு வைக்கும் முறை அறிமுகமானது.
-
கப்பலின் மேல்தளத்துக்குத் தேக்கு மரம் தவிர வேறு எதுவும்
பயன்படுத்தப்படுவதில்லை.
-
கங்காரு ஒரு குதிப்பில் 9 மீட்டர் தூரம் கடந்துவிடும்.
-
எகிப்து நாட்டில் முருங்கை மரம் கிடையாது.
-
சுவீடன் நாட்டில் இணையம் பயன்படுத்துபவர்கள் அதிகம் உள்ளனர்.
-
நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளின்
எல்லையில் உள்ளது.
-
மனிதன் தன் வாழ்நாளில் 20 கிலோகிராம் தூசியைச் சுவாசிக்கிறான்.
-
யானை தும்பிக்கையில் 1000 கிலோ எடையுள்ள பொருளைக் கூடத்
தூக்கிவிடும்.
-
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி தி பிரிசிடென்சி
பேங்க் ஆப் இந்தியா.
-
யானைகளின் வியர்வை சிகப்பு நிறத்தில் வெளியேறும்.
-
ஆக்டோபஸ் எனும் கடல் உயிரினம் அதை விட பத்து மடங்கு சிறிய
அளவுள்ள இடைவெளியில் கூட உள்ளே புகுந்து வெளியே வந்து விடும்.
-
வெள்ளைச் சுறா மீனிற்கு கடலில் எந்த உயிரினமும் எதிரிகள்
இல்லை.
-
சிங்கம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கக் கூடியது.
-
இந்தியாவில் உச்சநீதிமன்றம் 1764 ஆம் ஆண்டில்
ஏற்படுத்தப்பட்டது.
-
தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம் 1076 கிலோ மீட்டர்.
-
கடற்கரை மணலில் நடக்க சிரமமாக இருப்பதற்கு குறைந்த உராய்வு
விசையே காரணம்.
-
புலியின் உடலில் 100க்கும் மேற்பட்ட வரிகள் உள்ளன.
-
உலகில் ஊழலில் முதலிடம் பெற்ற நாடு நைஜீரியா.
-
பாம்புகள் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டன.