........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-5 ஆண்களின் ஆதங்கம்
- நீ “தீ”
இதை நான் சொல்லலங்க. சிங்கப்பூர் இலக்கிய (கவிதை)
உலகில் கவனிக்கத் தக்கவராக வலம் வந்து கொண்டிருக்கும் கவிஞர் திருமதி மலர்விழி
இளங்கோவன் சொல்லியிருக்காங்க. இவர் பெண் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன்
இதைப் பற்றி இப்ப சொல்ல வருகிறேன்? புரிந்துணர்வு என்பதற்காக! எந்த ஒரு ஆணும்
இன்றளவில் தனது கற்பு பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.
இத்தகு நிலையில் ஒரு பெண் ஆணின் அடிமனதில்
சொல்லத் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அரூபத்திற்கு கவிதை வடிவிலே உருவம்
கொடுத்துள்ளார். கவிஞரின் ஆண்களின் ஆதங்கம் கவிதை என்னையே குட்டிக் கொள்ளச்
செய்தது. இந்த கவிதையை இலகுவாக புரிந்து கொள்கிறோம் (எல்லோரும்
அப்படித்தானுங்களே!).
பலர் ஒரு கவிதைத் தொகுப்பில் பத்து கவிதை
தேறினால் போதும் என்கிற ரீதியில் படித்தால் எப்படிங்க இங்கே கவிதை ?. இது
கவிதையா என்று ஆதங்கப்படும் எழுத்தாளர்கள் அவர்களின் மனதினை (பொதிந்துள்ள
ரகசியங்களை) எழுதத் துணிந்தால் அப்பொழுது புரியும் உள்மன அழுக்குகள் அத்தனையும்!.
இந்த புரிந்துணர்வற்ற பயணம் நம்மை மாக்களை விட கீழான நிலைக்குதான் எடுத்துச்
செல்கிறது. இந்த புரிந்துணர்வு கவிதைக்கு மட்டுமல்ல நம்மின் நெடிய பயணமான
வாழ்க்கைக்கும் தான்!. |