........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

 எது உயர்ந்தது?

  • மனிதர்களெல்லாம் முனிவர்கள் அல்ல. ஆனால் முனிவர்களெல்லாம் மனிதர்கள்தான்.      

-கண்ணதாசன்.

  • புத்திசாலிகளுக்கு வாழ்வு ஒரு பிரச்சனை; முட்டாள்களுக்கு அது முடிந்த ஒன்று.

-மார்ஷல்.

  • உபயோகமில்லாத இரும்பு துருப்பிடித்து விடுகிறது; தேங்கி நிற்கும் தண்ணீர் தூய்மையை இழந்து விடுகிறது; அதே போன்று ஒன்றுமே செய்யாமல் சோம்பி நிற்கும் மனமும் செயலாற்றலை இழந்து விடுகிறது.

-லியனார்டோ டாவின்சி.

  • நாம் செய்கின்ற வேலையில் வெட்கப்படக் கூடாது. நாம் வெட்கப்படும்படியான வேலை எதையும் ஒருபோதும் செய்தல் கூடாது.

-ஸிஸெரோ.

  • பேச்சை விட மவுனமே சிறந்தது. பேசித்தான் தீர வேண்டுமென்றால், அப்பேச்சு, உண்மையாய், நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டும்.  

- மகாபாரதம்.

  • உலகில் ஆசையைப் போன்ற நெருப்பில்லை, வெறுப்பைப் போன்ற பகையில்லை, காமத்தைப் போன்ற புயலில்லை.  

-புத்தர்.

  • உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம். கவலையற்றிருப்பது இரண்டாவது இன்பம். பிற உயிர்களுக்கு உதவியாய் வாழ்வது மூன்றாவது இன்பம்.  

-மு.வரதராசனார்.

  • ஏடுகளில் உள்ள கடுஞ் சொற்கள் அறிவை வளர்க்கும். பெரியோர்களின் கொடுஞ் சொற்கள் நல்ல வாழ்வை வளர்க்கும். அரசனின் கொடிய சொற்கள் போரட்டத்தை வளர்க்கும்.  

-கௌடில்யர்.

  • இதைப் பெற்றுக் கொள் என்று ஒருவனுக்கு ஒன்றைக் கொடுப்பது உயர்ந்தது. அப்படியொருவர் கொடுக்கும் போது எனக்குத் தேவையில்லை, ஆகையால் இதை வாங்க மாட்டேன் என்று சொல்வது அதை விட உயர்ந்தது.  

-புறநானூறு.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.