........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
உலகப் பழமொழிகள். உயரமான மரத்தின் அடியிலும் கோடாரி...?
-
அயர்லாந்து.
இரண்டு முயல்களை
விரட்டினால், ஒரு
முயலைக் கூடப் பிடிக்க முடியாது.
-
கொரியா.
மலிவான பொருள்கள் நல்லவையல்ல, நல்ல பொருள்கள்
மலிவானவையல்ல.
-
சீனா.
மிகவும்
உயரமான மரத்திற்குக் கூட, அடியில் கோடாரி காத்துக் கொண்டிருக்கிறது.
-துருக்கி.
முறிந்த கையைக் கொண்டு உழைக்க முடியும். ஆனால்,
உடைந்த உள்ளத்தைக் கொண்டு உழைக்க முடியாது.
-பாரசீகம்.
நம்பிக்கை ஏழைகளை உயிரோடிருக்கச் செய்கிறது, பயம் பணக்காரர்களைக் கொல்கிறது.
-பின்லாந்து.
முட்டாள் தனத்தை மூலதனமாகக் கொண்டு செயல்படும் எந்தக் காரியமும் வெற்றியை
பெற்றுத் தராது.
-பெல்ஜியம்.
நீர்
அமைதியாக இருப்பதினால், முதலைகள் இல்லை என்று எண்ணி விடாதே...
-மலேசியா.
கெட்டிக்காரன் தவறு வெளியில் தெரியாது, ஆனால்
முட்டாளின் தவறு வெளியில் தம்பட்டம் அடிக்கும்.
-அமெரிக்கா.
கொஞ்சம் நட்பை இழப்பதை விட கொஞ்சம் பணத்தை
இழப்பது மேலானது.
-மடகாஸ்கர்.
உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது
முக்கியமில்லை, நீ எப்படி இருக்கிறாய் என்பதே முக்கியம்.
- லத்தீன்.
உன்னுடைய கவலைகளை, உன் முழங்காலுக்கு
மேலே போக விடாதே.
- ஸ்வீடன்.
நேற்று செய்த தவறை ஒப்புக் கொண்டால், இன்று
நீ அறிவாளி என்பதை உண்ர்த்தும்.
-ஹாலந்து.
தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை மேலானது
-அயர்லாந்து.
பெரிய
கடலிலிருந்து உப்பு நீரைப் பருகுவதை விட, சிறிய ஓடையிலிருந்து நல்ல நீர்
பருகுவது நல்லது.
-அமெரிக்கா.
ஆயிரம் எதிரிகளை விட , ஒரு போலி
நண்பனால்தான் அதிகத் தீமை.
-அர்மீனியா.
உலகில் அதிசயமான காரியம், முட்டாள்
வெற்றியடைவதும் அறிஞன் தோல்வியடைவதும் தான்.
-மடகாஸ்கர்.
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து
விடு. ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.
-அல்பேனியா.
கோபக்காரனிடம் கொஞ்சம் விலகி
இரு. மௌனமாக இருப்பவனிடம் என்றுமே விலகி இரு.
-இங்கிலாந்து.
தவறிழைத்தவன் மறந்து விடுகிறான்.ஆனால்
தவறிழைக்கப் பட்டவன் மறப்பதில்லை.
-ஆப்பிரிக்கா. |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.