........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கலாமா?
ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம்
மிகக் கடினம். ஆனால் திரும்பி வருவது எளிது.
-ஜப்பான்.
பூமியில் குடிசை கட்டுவதற்கு சக்தியற்ற சிலர்,
ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
-வேல்ஸ்.
தொடர்ந்து மூன்று நாள் பசித்துக் கிடந்தால்,
ஒரு மனிதன் திருடவும் துணிவான்.
-கொரியா.
உங்கள் சந்ததியினருக்குச் சரியான இரண்டு
வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். அவை இலக்கியமும் விவசாயமும்.
-சீனா.
தண்டிக்கப்படுகிறவன் திருடனல்ல.
திருடிவிட்டு அகப்பட்டுக் கொள்கிறானே அவன்தான் திருடன்.
-செக்கோஸ்லோவேகியா.
பொய்யினால் வரும் இன்பத்தை விட உண்மையால்
வரும் துன்பம் எத்தனையோ வகைகளில் சிறந்தது.
-டென்மார்க்.
வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை.
அதன் முடிவை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
-துருக்கி.
உழைப்புதான்
ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது.
- நைஜீரியா.
நூறு
ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய்.
- பல்கேரியா.
பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது.
அறிந்துள்ளதை எவ்விதம் அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க
வேண்டும்.
- பிரான்ஸ்.
இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன. புகழ்
சிறந்தவர்களையும் கெடுத்து விடுகிறது.
- பின்லாந்து.
மரம் ஏறத் தெரியாதவன் குரங்கை நம்பி பணத்தைக்
கொடுக்கக் கூடாது.
- பெல்ஜியம்.
இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம்
துன்பத்தை நோக்கி நகருகிறது.
- ருமேனியா. |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.