........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். ஆசையுடையவனுக்கு அறிவு இருக்குமா?
நேரம் எடுத்துக் கொள்.
உழைக்க நேரத்தை எடுத்துக் கொள்; அது
வெற்றியின் விலை
சிந்திக்க
நேரத்தை எடுத்துக் கொள்; அது சக்தியின்
ஊற்று
வேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்; அது ஆன்மீக
எழுச்சியின் வித்து.
விளையாட
நேரத்தை எடுத்துக் கொள்; அது இளமையின் ரகசியம்
படிக்க
நேரத்தை எடுத்துக் கொள்; அது அறிவின் வாயில்.
நல்லவை புரிய
நேரத்தை எடுத்துக் கொள்; அது இன்பத்தின் பாதை.
கனவு காண நேரத்தை
நேரத்தை எடுத்துக் கொள்; அது நிலவுக்கு ஏகும்
வழி.
அன்பு காட்ட
நேரத்தை எடுத்துக் கொள்; அது இறைவனின் கொடை
சேவை புரிய
நேரத்தை எடுத்துக் கொள்; அது வாழ்வின்
குறிக்கோள்.
சிரித்து மகிழ
நேரத்தை எடுத்துக் கொள்; அது இதயத்தின் இன்னிசை.
-எம்ப்ளாய்மெண்ட்
நியூஸில் வந்த தகவல்.
பரிசு
உனது பகைவனுக்கு அளிக்கத் தகுந்த முதன்மையான
பரிசு மன்னிப்பு.
உனக்குப் போட்டியுள்ளவனுக்குச் சகிப்புத்
தன்மை.
உன் நண்பனுக்கு உன் இதயம்.
உன் குழந்தைக்கு நல்ல மாதிரியான நடத்தை.
உன் தந்தைக்குத் தகுந்த மரியாதை
உனது தாய்க்கு அவள் உன்னைப் பற்றிப் பெருமை
படத்தக்க ஒழுக்கம்.
உனக்குத் தன்மானப் பெருமை.
எல்லா மனிதர்களுக்கும் தாராள மனப்பான்மை
-பால்போர்.
எது கற்பிக்கிறது?
அறிவாளர்களுக்குப் பகுத்தறிவு கற்பிக்கின்றது.
குறைந்த
அறிவுள்ளவர்களுக்கு அனுபவம் கற்பிக்கின்றது.
மிருகங்களுக்கு இயற்கை கற்பிக்கின்றது
-ஸிஸரோ.
ஆசையின் விளைவு
ஆசையினால் நிறைந்த ஞானம் கூட அழிந்து விடும்.
ஆசையுடையவன் முட்டாளாகிறான்.
ஆசையுடையவனுக்கு அறிவு தெளிவிருக்காது.
ஆசையினால் ஏற்படுவதே வாழ்வு. ஆனால் அந்த ஆசை
வெறியாயிருக்கக் கூடாது.
ஆசையினால் ஒருவன் மிருகமாகிறான்.
ஆசையை நீக்கி வாழும் வாழ்க்கை அவன் விரும்பிய
வண்ணம் வாய்க்கப் பெறுவான். |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.