........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். யார் பொய் சொல்கிறார்கள்?
ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக்
கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது.
-யாலப் தாம்சன்.
தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம்
தொடங்குகிறது.
-பங்.
முயற்சி என்பது
இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று,
ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோள் அது.
-தாகூர்.
கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை.
-மர்பி.
அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச்
சிந்திக்கிறார்கள்.
-டிரைடன்.
வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும்
-பீசீசர்.
நீயும் உடன்படாவிடில், நீ
தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது.
-எலினார் ரூஸ்வெல்ட்.
நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம்
பிறருக்கும் அளித்து விடுங்கள்.
- இங்கர்சால்.
மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும்
செலவில்லாத செல்வங்கள்.
- செர்வாண்டில்.
ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே
தேவை.
- ஜீந்தொஃபோன்தேன். |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.