........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

யார் பொய் சொல்கிறார்கள்?

  • ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது.

-யாலப் தாம்சன்.

  • தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது.

-பங்.

  • முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோள் அது.

-தாகூர்.

  • கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை.

-மர்பி.

  • அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள்.

-டிரைடன்.

  • வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும்

-பீசீசர்.

  • நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது.

 -எலினார் ரூஸ்வெல்ட்.

  •  நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம் பிறருக்கும் அளித்து விடுங்கள்.

- இங்கர்சால்.

  •  மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள்.

- செர்வாண்டில்.

  • ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே தேவை.

- ஜீந்தொஃபோன்தேன்.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.