........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
உலகப் பழமொழிகள். காதல் வந்துவிட்டால்...
நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனைப் போர்க்காலத்தில்
தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனைக் கடன் கொடுத்துத்
தெரிந்து கொள்ளலாம்;
துணைவியைச் செல்வம் போனபின்பு
தெரிந்து கொள்ளலாம்; உறவினரைத் துன்ப
காலத்தில்
தெரிந்து கொள்ளலாம்.
-இந்தியா.
உன்னைப் புண்படுத்துவது எது என்று உனக்குத்
தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.
-ஆப்பிரிக்கா.
மணவாழ்க்கை என்பது முற்றுகையிடப்பட்ட ஒரு
கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள். உள்ளே
இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.
-அரேபியா.
பயத்தைக் குறை-நம்பிக்கையைப் பெருக்கு!
உணவைக்குறை-உழைப்பைப் பெருக்கு! குடியைக் குறை-மூச்சைப் பெருக்கு! பேச்சைக்
குறை-செயலைப் பெருக்கு! வெறுப்பைக் குறை-அன்பைப் பெருக்கு! அனைத்து நன்மைகளும்
உனக்கே.
-ஸ்வீடன்.
துறவிகள் மெலிந்தால் அழகு. நான்கு கால்
விலங்கினங்கள் கொழுத்தால் அழகு. மனிதர்கள் படித்தால் அழகு. பெண்கள் மணந்தால்
அழகு.
-மியான்மர்.
தெரிந்தவையெல்லாம் சொல்ல வெண்டுமென்பதில்லை!
கேட்டதையெல்லாம் நம்ப வேண்டுமென்பதில்லை! முடிந்ததையெல்லாம் செய்ய
வேண்டுமென்பதில்லை.
-போர்ச்சுக்கல்.
பூமியில் பயனற்ற காரியங்கள் நான்கு: பலனற்ற
மண்ணில் பெய்த மழை; சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு; குருடனை மணந்த அழகி;
நன்றி கெட்டவனுக்குச் செய்த நற்காரியம்.
-அரேபியா.
மூன்று உயிரினங்கள் தங்களை
அலங்கரித்துக் கொள்வதில் காலத்தைக் கழிப்பவை. அவை; பூனைகள், ஈக்கள்; காதலிகள்.
- பிரான்ஸ்.
தூக்கம் வந்துவிட்டால் தலையணை
தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகே தேவையில்லை.
- ஆப்கானிஸ்தான்.
வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு.
ஆனால், அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
- நைஜீரியா. |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.