........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

மனிதர்களுக்குள்ளும் நாய்...

  • வஞ்சனை, கபடம் என சமயத்திற்கேற்பப் பிழைப்பவன் - நரி

  • ஊக்கமின்றி ஏதேனும் ஒன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து இருப்பவன் - தேவாங்கு

  • மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் - பாம்பு

  • தர்மம், புகழ் போன்றவற்றைப் பற்றிக் கவலையின்றி அற்ப சுகங்களில் மூழிகிக் கிடப்பவன் - பன்றி

  • சொந்தமாகப் பிழைக்காமல், அந்த அக்கறையின்றி பிறருக்குக் பிரியமானவனாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுப்பதைக் கொண்டு வையிறு நிறைப்பவன் - நாய்

  • கண்ட கண்ட விஷயங்களுக்குக்கெல்லாம் கோபம் அடைபவன் - வேட்டை நாய்

  • அறிவின் துணை கொண்டு பெரும் பொருளைச் சேர்க்கும் வழியின்றி முன்னோரின் சாஸ்திரங்களை, பெருமைகளை மட்டுமே வாயினால் அடிக்கடி, திரும்பத் திரும்பக் கூறுபவன் - கிளிப்பிள்ளை

  • பிறர் நம்மை எவ்வளவு அவமதித்தாலும், அந்த அக்கிரமங்களைத் தடுக்க முயற்சி செய்யாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் - கழுதை

  • வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் - வான் கோழி

  • கல்வி அறிவற்றவன் - வெறும் தூண்

  • தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிடாமல் பிறரின் சொத்தை அபகரித்து உண்டு வயிறு வளர்ப்பவன் - கழுகு

  • ஒரு புதிய உண்மை வரும் பொழுது அதனை ஆவலோடு அங்கீகரித்து அறிந்து கொள்ளாமல், அதனைக் கண்டு வெறுப்படைபவன் - ஆந்தை

  • ஒவ்வொரு நிமிசமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, பரமார்த்தத்தை அறிய முயல்கிறவன் - மனிதன் .

-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

தொகுப்பு: தாமரைச்செல்வி

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.