........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

கள்ளிக்கு முள்வேலி போடலாமா?

  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?

  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.

  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.

  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

  • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.

  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான்.

  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.

  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.

  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.

  • கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.

  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.

  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

  • கண் கண்டது கை செய்யும்.

  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?

  • கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.

  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?

  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி

  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

  • கரணம் தப்பினால் மரணம்.

  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?

  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்

  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?

  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்

  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

  • கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.

  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.

  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

  • கல்வி அழகே அழகு.

  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

  • கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.

  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

  • கள்ள மனம் துள்ளும்.

  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.

  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

  • கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு.

  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

  • கனிந்த பழம் தானே விழும்.

  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.