........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

கழுதையையும் காலைப் பிடி.

  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.

  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?

  • காணி ஆசை கோடி கேடு.

  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்.

  • காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.

  • காப்பு சொல்லும் கை மெலிவை.

  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

  • காய்த்த மரம் கல் அடிபடும்.

  • காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.

  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.

  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.

  • காலம் போகும் வார்த்தை நிற்கும், கப்பல் போகும் துறை நிற்கும்.

  • காலுக்குத்தக்க செருப்பும், கூலிக்குத்தக்க உழைப்பும்.

  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.

  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?

  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

  • காற்றுக்கு எதிரிலே துப்பினால் முகத்தில் விழும். .

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.