........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

கூலியைக் குறைத்து வேலையைக் கெடுக்கலாமா?

  • கிட்டாதாயின் வெட்டென மற

  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

  • கீர்த்தியால் பசி தீருமா?

  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.

  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.

  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.

  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

  • குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.

  • குணத்தை மாற்றக் குருவில்லை.

  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.

  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.

  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?

  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?

  • குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே

  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

  • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்

  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

  • குரங்கின் கைப் பூமாலை.

  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.

  • குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.

  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. .

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.