........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு?

  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது

  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது

  • கெடுவான் கேடு நினைப்பான்

  • கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

  • கெட்டும் பட்டணம் சேர்

  • கெண்டையைப் போட்டு வராலை இழு.

  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல. கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.

  • கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பினதெல்லாம் சொல்லாதே?

  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.

  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.

  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

  • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்

  • கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.

  • கையிலே காசு வாயிலே தோசை.

  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.

  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்

  • கொடிக்கு காய் கனமா?

  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

  • கொடுத்தைக் கேட்டால் அடுத்ததாம் பகை.

  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?

  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று, கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.

  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

  • கொல்லன் தெருவில் ஊசி விலை போகுமா?

  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?

  • கொள்ளிக்கு எதிர் போனாலும், வெள்ளிக்கு எதிர் போகலாகாது.

  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

  • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.

  • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.

  • கோணி கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

  • கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.

  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

  • கோபம் சண்டாளம்.

  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?

  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.