........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

இவன் செத்தாலும் விடமாட்டான்...?

  • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி

  • சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.

  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?

  • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.

  • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா

  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?

  • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?

  • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.

  • சாண் ஏற முழம் சறுக்கிறது.

  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.

  • சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

  • சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

  • சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

  • சுக துக்கம் சுழல் சக்கரம்.

  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

  • சுட்ட சட்டி அறியுமா சுவை.

  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

  • சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே

  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.

  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

  • சூடு கண்ட பூனை அடுப்பங்கரையிற் சேராது.

  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?

  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?

  • செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?

  • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

  • செய்வன திருந்தச் செய்.

  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?

  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி. சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.

  • சேற்றிலே செந்தாமரை போல.

  • சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

  • சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

  • சொல் அம்போ வில் அம்போ?

  • சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.

  • சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.

  • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

  • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்கு தலைச்சுமை.

  • சொல்வல்லவனை வெல்லல் அரிது.

  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

  • சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.

  • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.

  • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.