........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
அருள் மொழிகள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அருள் மொழிகள்
பேரின்பம்
புத்திசாலியாக...
மேலெழுந்து விளங்கும் போது
எனக்குத் தராதே
பலவீனப்படுத்தும்
எப்போது வரம்பு மீறப் படுகின்றதோ, அப்போது அது
பயத்தை உண்டாக்குகிறது. பயம் வெறுப்புணர்ச்சியை உண்டாக்குகிறது. இந்த
வெறுப்புணர்ச்சி நம்மை மீண்டும் வரம்பிற்குட்படுத்துகிறது. வரம்பிற்குள்
இருப்பதற்கு, நீ தற்காப்பு தேடுகிறாய். உன் நிலையை நீ காக்கும் முயற்சி எவ்வளவு
மன உளைச்சலைத் தருகிறது. இல்லையா? அவ்வாறு ஒவ்வொரு முறையும் நீ செய்யும் முயற்சி,
உன்னைப் பலவீனப் படுத்துகிறது.
வரவேற்பும் எதிர்ப்பும்
நீ உன் மனதில் தோன்றும் எண்ணங்களை நல்லவையா,
கெட்டவையா என வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம். வரவேற்பதும், எதிர்ப்பதும் ஒரு
ஊஞ்சல் ஆட்டம் போன்றது.
வாழ்வில் முன்னேற நல்லெண்ணங்களை வரவேற்பது
இன்றியமையாதது. அவ்வெண்ணங்களை நிலை நிறுத்துவதற்குக் கெட்ட எண்ணங்களை
எதிர்ப்பதும் இன்றியமையாததே.
துவக்கம்
ஆம் எனும் மனம் அமைதியான, புனிதமான, இன்பமயமான
மனம்.
இல்லை எனும் மனம் கிளர்ச்சியான, சந்தேகம்
கொள்ளும் துன்பமயமான மனம்.
ஆம் எனும் மனநிலையில் விசுவாசம் துவங்குகிறது.
இல்லை எனும் மனநிலையில் அது அழியத் துவங்குகிறது.
நம்பிக்கை
உனக்கு இறைவனிடம் நம்பிக்கை இருக்கிறதென்றால், அவரை
அறிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யாதே. இறைவனும், ஆன்மாவும் அறிந்து
கொள்ளக் கூடிய பொருட்களல்ல. நீ எதை அறிந்து கொள்ளக்கூடிய ஒரு பொருளாகச் செய்து
கொண்டு விட்டாயோ, அதில் உனக்கு நம்பிக்கை கொள்ள முடியாது.
தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.