........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

மக்களை ஏமாளி என்று நினைக்கலாமா?

  • ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை; மகிழ்ச்சி தேவை; இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடை இல்லாமல் இருப்பதுதான். 

  • மொழி, இனம், கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றை மக்களை ஒன்று சேர்ப்பதற்கும் சமுதாயத்தை உயர்த்துவதற்கும் மேன்மைப் படுத்துவதற்கும் பயன்பட வேண்டும். இந்த உயரிய குறிக்கோள்தான் தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோளாகும்.

  • அகமும் புறமும் ஒன்றுபட்டு இயங்கப் பகுத்தறியும் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதைப் பயன்படுத்தத் தவறுவதனாலேயே மக்களிடையே மாறுபட்ட தன்மைகள் இடம் பெறுகின்றன.

  • மாற்றங்களின்றி முன்னேற்றமில்லை; முன்னேற்றமில்லையேல் வரலாறு இல்லை. மாறுதல் என்பது சிறப்பாக அமையும் போதுதான், அதுவே முன்னேற்றத்திற்கான சீரான பாதையினையும் அமைத்துக் கொடுத்து விடுகிறது.

  • நமது பணிகளில் தாமதம் கூடாது. நமது பயணத்தில் தயக்கம் இருத்தலாகாது. நமது உழைப்பில் குறைபாடு இருத்தல் ஆகாது.

  • சாதி, மத, இன பேதங்களைல்லாம் கடந்து நின்று தமிழக மக்கள் கொண்டாடும் தனிச் சிறப்புடைய திருநாள் பொங்கல் திருநாள். உழவரும் பிற துறைகளில் உழைப்போரும் ஒன்று கூடி உழைப்பால் விளைந்த செல்வங்களைப் பகிர்ந்து உண்டு மகிழும் திருநாள் இது.

  • ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல. ஜாதி என்பது அதிகமாகப் பேசப்பட வேண்டியதில்லை.

  • உழைக்கும் வர்க்கம் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது; ஆனால் அதற்கு முன்பு நாமே கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

  • நல்ல நிலைக்கு வந்த பிறகும் நாம் அனுபவித்த துன்ப, துயரங்களை நினைவில் கொண்டால்தான் நமது கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியும்.

  • சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்.

  • இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.

  • கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தையும் காட்ட முடியும்.

  • வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

  • எழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.

  • ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும் போது எளிமையாக இருபதுதான் தியாகம்.

  • வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான , பயங்கர விஷவாயு ஆகும்.

  • நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.

  • உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.

- எம்.ஜி.ராமச்சந்திரன்.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.