........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் ஆலோசனைகளை அள்ளி வீசுபவர்கள்!
நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர,
நல்லோர்க்கு வேறு மருந்து கிடையாது.
-ஷேக்ஸ்பியர்
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில்
உறுதி ஆகிய மூன்றும் உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும்.
-புல்லர்
பிறருடைய அன்புக்குப் பாத்திரமாவதை விட
பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவதே மேல்.
-மெக்னால்ட்
உனக்குத் தெரிந்ததை தெரியுமென்று ஒப்புக் கொள்.
தெரியாததைத் தெரியாது என உணர்தல் அறிவு.
- கன்பூஷியஸ்
விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவது பெரிதன்று.
எப்போதும் உயர்ந்தபடி இருக்க வேண்டும். அதுவே பெரிது.
-இப்தார்க்
சண்டை போடும் நேரமெல்லாம், உண்மை அதன் சத்தியத்தை
இழந்து விடுகிறது.
- ரைரன்
நல்லவர்களின் புத்திமதியைப் புறக்கணித்து,
துஷ்டர்களின் யோசனையைப் பின்பற்றுகிறவன் உயிரைக் காப்பாற்ற முடியாது.
-பஞ்சதந்திரம்
உழைப்பால் கிடைத்த சொந்தப் பொருளுக்கு உள்ள
சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.
-ஹென்றிபோர்டு
ஒருவன் எப்போதும் வீரனாய் இருக்க முடியாது.
ஆனால் ஒருவன் எப்போதும் மனிதனாய் இருக்க முடியும்.
-கதே
வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி
பெறுவான்.
-பெர்ஸியஸ்
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை
இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.
-வோல்டன்
ஏழையை உலகம் மதிப்பதில்லை. பணக்காரனைக் கண்டு
பொறாமைப்படுகிறது.
- ஹென்றி போர்டு
மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது
வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால்தான்.
-எடிசன்
வெறுமனே மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம்
என்பது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம் ஆகாது.
-மு.கருணாநிதி
பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான்
ஆலோசனைகளை அள்ளி வீசுவர்.
- மால்கம்
தீயமனிதர்கள் பயத்திற்குக் கீழ்படிகின்றனர்.
நல்ல மனிதர்கள் அன்புக்குக் கீழ்படிகின்றனர்.
- அரிஸ்டாட்டில்
நாம் இதுவரை முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம்
நல்லவர்களோடு பழகவில்லை.
-கிருபானந்த வாரியார்
கடந்து போன விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக்
கண்ணீரை மென்மேலும் வீணாக்காதீர்கள்.
-ஐரிபைடஸ்
நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று
விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது.
-விவேகானந்தர்
தொகுப்பு:
தேனி.எஸ்.மாரியப்பன்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.