........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் எதற்கும் மறுபரிசீலனை செய்யுங்கள்!
உலகத்தில் மிகவும் மலிவான பொருள் அன்புதான்.அதை
வாங்குகிறவனுக்கும், விற்பவனுக்கும் பன்மடங்கு லாபத்தைத் தரும்.
-இங்கர்சால்
என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று தன்மீது
நம்பிக்கை வைத்திருப்பதே வெற்றியின் இரகசியம்.
-இராக்கர்
குடும்பம் நன்றாக வாழ வேண்டுமானால் மனிதர்கள்
இயற்கையாக அழுதால் மட்டும் போதாது. செயற்கையாகவாவது சிரிக்கவும் வேண்டும்.
-கண்ணதாசன்
கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம்
இல்லையெனில் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியாது.
- அறிஞர் அண்ணா
தொழில் எவ்வளவு கீழ்த்தரமாக இருந்தாலும்
பரவாயில்லை, சோம்பேறியாக இருப்பதுதான் அவமானம்.
-டால்ஸ்டாய்
மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள
செல்வம். ஆடம்பரம் என்பது என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை.
- சாக்ரடீஸ்
சேமிக்க வேண்டிய நேரத்தில் செலவு
செய்யாதீர்கள். செலவு செய்ய வேண்டிய நேரத்தில் சிக்கனம் செய்யாதீர்கள்.
-செனாகா
பெரும்பாலும் முதல் சிந்தனை தெளிவற்றதாக
இருக்கும். எதற்கும் மறுசிந்தனை செய்யுங்கள்.
-ஷேக்ஸ்பியர்
ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி
நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழிவாங்குவது போலாகும்.
-தேமேச்தனுஸ்
கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி
வருத்தப்பட வேண்டாம்.அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு
வா.
-சிசரோ
நீங்கள் புதிதாகத் தெரிந்து கொண்டதை, என்று
நிறுத்தத் தொடங்குகிறீர்களோ அன்றே உங்களின் முதுமைப் பருவம் தொடங்கி விடுகிறது.
-கைபர்ட் கேசன்
தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்பவன்தான்
உலகிலேயே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி.
- பெர்னாட்சா
கள்ளம் கபடமற்ற நாத்திகன் அந்த வழக்கம் நிறைந்த
வைதீகனைவிட ஆயிரம் மடங்கு மேலானவன்.
-விவேகானந்தர்
உன்னை உண்மையிலேயே புரிந்து கொண்டிருக்கும்
நண்பன்தான் உன்னையே உருவாக்குகின்றான்.
-ரோமின்
உங்களை ஒருவர் விமர்சித்தல் எரிச்சல் வருகிறதா?
அப்படியெனில் அவ்விமர்சனம் சரியானது.
-
தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடி வெற்றி பெற
குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது.
- ஓவிட்
முடிந்தால் சமாதான மாக இரு.ஆனால் என்ன
நேர்ந்தாலும் உண்மையை மட்டும் கூறு.
-மார்ட்டின் லுதர்கிங்.
இது மனதில் இருக்கட்டும். மனிதன் பயனின்றி
அழியக்கூடாது.
-காரல் மார்க்ஸ் |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.