........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
a |
பொன்மொழிகள் போலிகள் மலிந்துள்ள காலம்.
ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை,
சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு.
தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே
எழுச்சி உண்டாக்க முடியாது.
ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில்
கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை
தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய
பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய
செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு
கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.
பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம்
விழுங்கப் பெற்று தன மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக்
கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து
கொண்டே இருக்கிறது.
ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால்
அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக
எல்லாரும் இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது
ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.
அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான
செயல்களைக் காணும் போது அதனிடம் அனுதாபம் கொள்வதும்
மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை
மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.
யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று
ஏன் சொல்ல வேண்டும்...? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற
கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.
எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர்
கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.
-பசும்பொன்
முத்துராமலிங்கம்.
தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.