........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
|
a |
பொன்மொழிகள் லஞ்சம் துணிந்து உள்ளே புகுந்து விடும்.
ஞாபாவத்திற்கு பல கருவிகள் உண்டு.
ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைப்பிடி பொய். -ஷோர்மன்.
பழி வாங்கும்
கருத்துடையவன், பிறர் தந்த புண்ணை ஆறவிடுவதில்லை. - பேகன்
முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம், நாளைய
உறுதிநிலை. -எமர்சன்
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்
கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. -சாமுவேல் பட்லர்
இன்பம் சேர்ந்து வருவதில்லை. துன்பம் தனியே
வருவதில்லை. -சேக்ஸ்பியர்
பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து
கொண்டே இருக்கும். -சாணக்கியர்
பொருள் உள்ள அளவு மண்ணுலகில் மதிப்பு. புண்ணியம்
உள்ள அளவு விண்ணுலகில் மதிப்பு. -பகவத்கீதை
பெரும் அறிவாளிகள், புத்தகங்களோடு
வாழ்க்கையையும் சேர்த்துப் படிக்கின்றார்கள். -வின்யூடவ்
பொய் சொல்வது ஆண்களுக்கு கடைசி மார்க்கம்.
பெண்களுக்கோ அது முதலுதவி. -கெலட்பர்ஜஸ்
மனிதன் உருவாவது ஒரு சிறு துளியில், அவன்
அழிக்கப்படுவதும் ஒரு பொறியில்தான். -கண்ணதாசன்
நல்ல நூல் நிலையம் ஒன்றின் பாதிப் பகுதியைத்
திரட்டினால்தான் ஒரு புத்தகம் எழுத முடியும். -ஜான்சன்
எல்லோரும் நீதியை விரும்புகின்றனர். ஆனால்
அடுத்தவர் விசயத்தில் மட்டும் - ஆண்ட்ரு
முட்டாள்களின் இதயம் வாயில் உள்ளது. ஆனால்
அறிவாளிகள் இதயத்தில்தான் வாய் உள்ளது. -பிராய்ஸின்
சிந்திக்காமல் படிப்பது வீண். படிக்காமல்
சிந்திப்பது வீண். - கன்பூஷியஸ்
வாழத் துடிக்கும் ஆசை முதியோர்க்கு இருப்பது
போல் வேறு யாருக்கும் இருக்காது. - மேரிஸ்டோபீலப்
நேர்மை வாயிற்கதவு அருகே நின்று தட்டுகிறது.
ஆனால் லஞ்சமோ துணிந்து உள்ளே புகுகிறது. - பார்னபி ரிச்
நட்புதான் சுகங்களில் மட்டுமல்லாமல்
துக்கத்திலும் பங்கேற்கிறது. -வைரமுத்து
ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால்
பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று. -ஹோம்ஸ்
எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நடக்காமல்
மற்றவர்களுக்கு நடக்கும் வரை. -வில்ரோஜர்ஸ்
நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே
காணும் கனவு -பிளினி
தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்தத் தெரியாத
எவனுக்கும் பிற மொழிகளில் புலமை வராது. -பெர்னாட்ஷா
நாணயத்தை இழந்தவன் இழப்பதற்கு வேறொன்றும்
இல்லாதவன். -விலி
ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து
விரல்களே. -ராபர்ட் கோலியன்
ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு, வாழ்க்கை
முழுவதும் வேதனை தேடி வருகிறது. -சிங்சவ்
சும்மாயிருந்து துருப்பிடித்து அழிவதை விட,
உழைத்துத் தேய்வது சிறந்தது. - ரிச்சார்ட்.
தொகுப்பு:
தேனி.எஸ்.மாரியப்பன்.
|
முகப்பு |