........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
|
a |
பொன்மொழிகள் திருமணத்திற்கு முன் காதல்...
நம்பிக்கை இழக்காதே. அவநம்பிக்கையானது அறிவு,
ஒழுக்கம் ஆகியவைகளுக்கு வீழ்ச்சியாகும். - இக்பால்
துன்பம் இல்லாமல் வெற்றி இல்லை. முயற்சி
இல்லாமல் பெருமை இல்லை. -பென்
அறிவோடு படிப்பவனே சிறந்த மேற்கோள்களைக்
காட்டமுடியும். - லூயிசாமேரி
பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே
மடமையின் முழு அடையாளம். - ஸிஸரோ
அஞ்சாதவனும், ஆசைப்படாதவனும் உண்மையான உயர்ந்த
மனிதன். -ஹிஜிஸ்
அறிவுரை, தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் மருந்து
போன்றது. - ஜோஷ்பிஸ்லிங்ஸ்
கவலையுடன் விருந்து உண்பதைக் காட்டிலும், ஒரு
கவளம் அமைதியாக உண்பதே மேல். -ஈசாப்
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாயில்களும்
திறந்து வரவேற்பு அளிக்கும். -எமர்சன்
கடுமையான உழைப்பைத் தவிர, வெற்றிக்கு வேறு
ரகசியம் ஏதுமில்லை. - டர்னர்
அறிவு காட்டும் வழியில் மட்டும் செல்லாதே. ஆன்மா
கூறும் வழியில் செல். - டால்ஸ்டாய்
சோம்பேறித்தனத்தில் மூழ்கியிருக்கும் ஒருவனிடம்
எப்போதும் ஏக்கம் குடி கொண்டிருக்கும். -கார்லைல்
மனிதனிடமுள்ள வற்றாத ஆசைகள்தாம் அவன்
வாழவேண்டுமென வற்புறுத்துகின்றன. -காங்கிரி
அறியாமை ஒருவனுக்கு ஆசிர்வாதமானால்,
புத்திசாலியாய் இருப்பவன் முட்டாள் என்றாகிவிடுமே. -தாமஸ்கிரே
உண்மைகளைப் போற்றுங்கள். தவறுகளைப் பொறுத்துக்
கொள்ளுங்கள் - வால்ட்டேயர்
தாமரையிலையிலே உருண்டோடும் பனித்துளி போன்றது
மனித வாழ்க்கை. -தாகூர்
திருமணத்திற்கு முன் காதல் என்பது முடிவு பெறாத
நூலுக்கு மிகச் சிறிய முகவுரை போன்றது. -தாமஸ்புல்லர்
ஏழையை உலகம் மதிப்பதில்லை. பணக்காரனைக் கண்டு
பொறாமைப்படுகிறது. -ஹென்றி போர்டு
வலி உடலை வதைக்கிறது. விலை மனிதனை வதைக்கிறது.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
சிறிய விசயங்களில் பொறுமை காட்டாவிட்டால்,
பெரிய காரியங்கள் கெட்டுப் போகும். - கன்பூஷியஸ்
ஆசையின் தாகம் முழுக்கத் தீர்வதுமில்லை.
ஒருபோதும் தணிவதுமில்லை. -நிசரோ
வாழத்துடிக்கும் ஆசை முதியோர்க்கு இருப்பது போல்
வேறு யாருக்கும் இருக்காது. -மேரிஸ்டோபீலப்
வறட்டுப் பிடிவாதம் உள்ள மனிதர்களுக்கு அவர்கள்
அடையும் கஷ்டநஷ்டங்களே ஆசிரியர்கள் -ஷேக்ஸ்பியர்
நண்பனைப் பாராட்ட வேண்டியிருந்தால் பலர்
முன்னிலையில் பாராட்டுங்கள். -நேரு
தவறு ஒன்றுதான் அரசாங்கத் தயவை வேண்டும்.
உண்மைக்கு அது வேண்டியதில்லை. -தாமஸ் ஜெபாஸன்
முயற்சியினால் கிடைக்கும் பயனே இன்பங்கள்
அனைத்திலும் மிக இன்பமானது. -லாவனார்கூஸ்
தொகுப்பு:
தேனி.எஸ்.மாரியப்பன்.
|
முகப்பு |