........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
|
a |
பொன்மொழிகள் காதல் என்பது...?
காதல் எனும் வீணையில் மனிதன் ஒரு தந்தியைப்
போன்றவன்.
- மாக்ஸிம்
காதலின் முடிவுக்கு எல்லா உணர்ச்சிகளும் தலை
வணங்குகின்றன.
- சிசரோ
காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்து
வாழ்க்கை மாறிய போதிலும் அது மாறாது.
- மாண்டேஸகியு.
காதல் பெரிய சூதாட்டம். சகலத்தையும் துறக்கத்
தயாராக இருப்பவர்களே அதில் துணிந்து இறங்கலாம்.
- அம்பிரோஸ் பியர்டிஸ்
காதலிக்கும் போது ஒவ்வொரு மனிதனும் கவிஞனாகவே
இருக்கிறான்.
- எபிக்பீடஸ்
காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது.
ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கிறது.
-பிராங்க்ளின்.
அழகிய பெண்ணும் அவள் அளிக்கும் காதலும் உலகை
அழியாமல் காத்து வருகிறது.
- ஆர்தர் பிரிஸ்டேன்.
காதல் என்பது கண நேர உணர்ச்சியல்ல. காலமெல்லாம்
தொடர வேண்டிய அன்புப் பயணம்
- மாத்யூஸ்.
காதல் என்பது இருவர் மனம் விரிந்து சுருதியில்
சேர்ந்த சங்கீதம் போன்றது.
-கிறிஸ்டபர்.
காதல் எதையும் பொருட்படுத்தாது. ஆனால் தன்னை
மட்டும் அலட்சியம் செய்தால் அதற்குப் பொறுக்காது.
-பாஸ்கல்.
காதல் அறிவை விட உயர்வானது. செல்வத்தை விட
ஆபூர்வமானது.
- ஹென்றி டேவிட்
காதலைத் தடுத்தால் அணையப் போகும் தீபத்தை
தூண்டிவிட்டது போல் ஆகி விடும்.
-ஸிஸிலர்
காதலை யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. தன்னை
அறியாமலே வருவது.
-ஸைரஸ்
காதலுக்கு அடுத்தபடியாக மனித உள்ளத்தில் தோன்றக்
கூடிய தெய்வீக உணர்ச்சி இரக்கம்.
-பர்க்.
தொகுப்பு:
தேனி.எஸ்.மாரியப்பன்.
|
முகப்பு |