........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
|
a |
பொன்மொழிகள் எந்தக் கை மேலானது...?
பணிவு மாத்திரமே கட்டளையிடுவதற்கும் உரிமை
அளிக்கின்றது. -எமர்ஸன்.
புவி என்பது ஒரு தேசம். மனித இனத்தவர் அதன்
பிரசைகள்.
-பஹாவுல்லாஹ்.
ஏழைகளுக்கு சிக்கனம் ஆன்மீகமாகும். -மகாத்மா
காந்தி.
காதல் என்பது ஒரு மலர். கல்யாணம் என்பது ஒரு
பழம். -பின்னிஷ் பழமொழி.
தீய பழக்கங்கள் நல்ல ஒழுக்கங்களைக் கெடுத்து
விடும். -பர்திரிஹரி.
மரணிப்பதை விட வேதனைப்படுவதற்கு அதிகத் துணிவு
வேண்டும். -நெப்போலியன்.
மிகச்சிறந்த நூல்களை முதலாவதாக வாசித்துக் கொள்;
அன்றேல்,அவற்றை அறவே வாசித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்காமற் போகும். -தோரியு.
நற்செயலின் ஒரே வெகுமதி நற்செயலே. -எமர்ஸன்.
செல்வம் அதன் உடைமைக்காரனுக்குச் சேவை
செய்யும். அன்றேல்,அவனை ஆட்சி செய்யும்.
குருடனும், பார்வையுள்ளவனும், இருளும் - ஒளியும்,
நிழலும் - வெப்பமும் சமமாகாது. -திருக்குர்ஆன்.
மூடன் தான் புத்திசாலி என நினைக்கின்றான். ஆனால்,
புத்திசாலி தான் ஒரு மூடன் எனத் தெரிந்து கொள்கின்றான். -ஷேக்ஸ்பியர்
ஆண்கள் வாழ்க்கையை ஆரம்பத்திலேயே
தெரிந்து கொள்கின்றனர். ஆனால், பெண்கள் வாழ்க்கையை
மிகவும் தாமதமாகவே தெரிந்து கொள்கின்றனர். -வில்டி
“நீ
அறியாமையில் இருக்கிறாய்” என்ற உணர்வுடன் இருப்பது நீ அறிவை அடைய மேற்கொள்ளும்
ஒரு பெரும் நடவடிக்கையாகும். -டிஸ்ரேலி.
நெருப்பை விறகு தின்பது போல பொறாமையானது
நற்காரியங்களைத் தின்று விடும்.-முஹம்மது நபி(ஸல்)
இரும்பு இரும்பைக் கூர்மையாக்குகின்றது. அறிஞன்
அறிஞனைச் செம்மைப் படுத்துகின்றான்.-தாமூத்.
அரைவாசி மூடர்களிலும்,
அரைவாசி புத்திசாலிகளிலும் ஆபத்து (மறைந்து)
கிடக்கின்றது. -கோதி
மொழி என்பது ஒரு நகரமாகும்.
அதனைக் கட்டி எழுப்ப ஒவ்வொரு மனிதனும் ஒரு கல் கொண்டு வந்தான்.
-எமர்ஸன்.
ஒரு செயலை ஒரு சொல்லில் மாற்றுவதை விட,
ஒரு சொல்லை ஒரு செயலில் மாற்றுவது மிகக்கடினமானது என்பது ஒவ்வொருவருக்கும்
தெரியும். - மாக்ஸிம்
கார்க்கி.
ஓர் இலட்சம் துப்பாக்கிகளை விட மூன்று
பத்திரிகைகளுக்கு அஞ்சுகின்றேன். -நெப்போலியன்.
நீ ஒரு மனிதனுக்குக்
கல்வி ஊட்டினால் நீ ஓர் ஆளுக்குக் கல்வி ஊட்டுகிறாய்.
ஆனால் நீ ஒரு பெண்ணுக்குக் கல்வி ஊட்டினால் ஒரு
குடும்பத்துக்கேக் கல்வி ஊட்டுகின்றாய்.
-ரூபி மனிகன்
கொடுக்கும் கையானது வாங்கும் கையைவிட மேலானது.
-முஹம்மது நபி(ஸல்)
உனது கரங்கள் -
உனது கண்கள் - உனது குரல்
- உனது சிந்தனைகள் யாவும் உனது சேவகர்கள்.
-லொரெட்டா யங்க்.
மனிதர்களைப்பற்றித் தீய எண்ணங்கொள்வதைத்
தவிர்த்துக் கொள்ளுங்கள். -முஹம்மது
நபி (ஸல்)
உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான்
அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக்
கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார். -முஹம்மது
நபி(ஸல்)
எவரொருவர் (பிறரால் பாதிக்கப்பட்ட பின்)
பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் (அது) நிச்சயமாக
காரியங்களில் மிக்க உறுதியானதாகும். - திருக்குர்ஆன்
தொகுப்பு:
எம்.வை.எம். மீஆத், தும்புளுவாவை, இலங்கை.
|