........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

பொன்மொழிகள்

எல்லாம் வேடிக்கைதான். எதுவரை தெரியுமா?

  • பகட்டு என்ற மென்மையான படுக்கையில் பல பெரிய அரசுகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கின்றன. - கோயத்

  • கட்டுப்பாடான சீரான வழியில் நம்மை நடத்திக் கொண்டால் பண்பு வளரும். இல்லையேல் நேர்மாறான விளைவுகளையும் உண்டாக்கும். -பிளேட்டோ.

  • சுமை அதிகமாகத் தோன்றத் தோன்ற நீங்கள் மேலே ஏறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். -அனாஸி.

  • சொற்கள் நம் சிறந்த உடைகள் அவற்றைக் கந்தலாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது. -ஹியுகோ.

  • ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம். - ஹோமர்.

  • துன்பம் வந்து விடுமோ என்ற பயம், துன்பத்தை விட துயரமானது, கொடுமையானது. -ஹைஸர்.

  • எப்படி உடலுக்குச் சுத்தமான ஆடைகள் தேவையோ, அதே போல் நம் உள்ளத்திற்குத் தூய்மையான நல்ல குணங்கள் தேவை. -வில்லியம் ஹாஸ்ல்ப்.

  • எண்ணங்கள் தாடியைப் போன்றவை. வயது வந்த பின்புதான் அவை வளர்கின்றன. - வால்டேயர்.

  • ஏழை உண்மையைச் சொன்னாலும் எவரும் அவனை நம்புவதில்லை. - மெனாஸ்டர்.

  • புத்தகங்கள் மனிதப் பிறவி அல்ல. ஆயினும் அவை என்றும் உயிருடன் இருக்கின்றன. - வ.பென்னட்

  • நல்லகாலம் பிறக்கும் என்கிற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது. - சேக்ஸ்பியர்.

  • சிக்கனமில்லாமல் வாழ்ந்தால் சிறு குடும்பம் கூட சீரழிந்து விடும். - உட்வெல்.

  • ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று - ஹோம்ஸ்.

  • தன் பகைவனால் ஏற்படும் தீமையை விட அடக்கமில்லாத மனமே ஒருவனுக்கு அதிக தீமையைச் செய்யும். - புத்தர்.

  • எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நடக்காமல் மற்றவர்களுக்கு நடக்கும் வரை -வில்ரோஜர்ஸ்.

  • லட்சியம் இல்லா மனிதன் திசைகாட்டும் கருவி இல்லாத கப்பலைப் போன்றவன். - ஆவ்பரி.

  • தாய்மொழியை செம்மையாக பயன்படுத்தத் தெரியாத எவனுக்கும் பிறமொழியில் புலமை வராது. - பெர்னாட்ஷா.

  • மனமாரத் தனக்குத்தானே நம்பகமாக நடப்பதுதான் மனிதன் இன்பம் காணும் வழி. -தாமஸ் பேகன்.

  • சிறிய செலவுகள் பற்றி எச்சரிக்கையாயிருங்கள். சிறிய ஓட்டைதான் பெரிய கப்பலையே கவிழ்த்து விடும். -பெஞ்சமின் பிராங்க்ளின்.

  • குழந்தைக்கு செய்ய வேண்டிய முதல் கடமை அவர்களை மகிழ்ச்சியாய் இருக்கச் செய்வதே. - தாமஸ் கார்டிலைல்.

  • ஞானிகள் பிறருக்கு அடங்கவும் மாட்டார்கல். பிறரை அடக்க முயலவும் மாட்டார்கள். -லாபுரூயர்

  • மனித வாழ்க்கை என்பது எண்ணுவதற்குரிய பல திருப்பங்களைக் கொண்ட நதி. - ஹால்டன்.

  • வேகத்துடன் உயர்வது பெரியது அல்ல எப்போதும் உயர்ந்தபடியே இருக்க வேண்டும் அதுவே பெரிது. -இப்தார்க்.

  • மனைவி என்பவள் வாலிபத்தில் காதலி. ஒரு வயதில் தோழி, முதுமையில் தாய். -பேக்கன்.

  • எந்த இடத்தில் நாம் பணக்காரராய் இருந்தோமோ அந்த இடத்தில் ஏழையாய் இருப்பது உத்தமமன்று. -பஞ்சதந்திரம்.

தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு