........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் கோழையான மனிதன் வெல்ல முடியுமா?
யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே. - ஜார்ஜ் எலியட்
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும்
தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
- கன்ப்யூஷியஸ்.
மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான
துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற
எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும்
போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
- அய்டா.
திடீரெனப் பொங்கிச்
செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல்,
வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன்
அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்
போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி
ஏற்படுத்திக் கொடுக்கும்.
- டப்பீல்டு.
அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும்
தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன்
புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு
எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது.
விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும்.
- ஸ்ரீ அன்னை.
நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர்
மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல்
முக்கியமானதாகும்.
- நார்மன் வின்சென்ட்பீல்
கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில்
எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச்
சொன்னால் கண்டிப்பாகத் தோற்று விடுவான். ஒவ்வொரு
தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது
தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட்.
எளிமையாக இருங்கள்.
எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத்
தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு
உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு
உடனடியாக நம் மனக்கதவை மூடக்கூடிய
சக்தியும், எளிமையாக வாழும் போதுதான் கிடைக்கும்.
எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம்
நினைத்ததை சாதிக்கலாம்.
- ஜே.ஆர். லோவெல்
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும்
ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம்
எவ்வாறு அன்பைச் செலுத்த இயலும்.
- அன்னை தெரசா.
அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது.
புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான்.
இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்.
- ஓஷோ ரஜனீஷ்.
தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |