|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
புத்தகப்பார்வை-17
பக்கம்- 156 விலை-? என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா..."பேசுவதைப் பற்றி..."
-த.தங்கமணி-
செல்வம் பதிப்பகம் |
|
பார்வை :
சுற்றமும் சூழலும் சாராது ஓர் நிலையில் வாழ்வதே வாழும் வகையாம்
சிறப்பு என்னும் உயரிய நோக்கத்துடன் வாழ்ந்த புலவர் தமிழ்மணி அவர்களின்
புதல்வன் தங்கமணி பொறியியல் படித்து விட்டு திரைகடலோடினாலும் திருக்குறளில்
உள்ளம் நெகிழ்ந்து, நுண்மான் நுழைபுலம் கண்டு சமீபத்திய தேவைக்கும் ஏற்ற
வகையில், வித்தியாசமான
அளவில், உரிய வடிவங்களுடன் திருக்குறள் கையடக்க புத்தக
வடிவங்களை வெளியிட்டு வருகின்றார், திருக்குறளின் அழகிய, குறுகிய வடிவமும், அதற்குள்ளேயே திணித்து வைக்கப்பட்ட பொருள் திண்மையும் உலகின் இலக்கிய
ஆர்வலர்களால் உற்று நோக்கப்பட்டு வருகின்றது. பைபிள், குரான் மற்றும்
மார்க்ஸின் மூலதனம் போன்ற நூல்களுக்குப் பின் உலக மொழிகளில் அதிகமாக மொழி
பெயர்க்கப்பட்டது திருக்குறள் என்று ஆய்வுகள் கூறுகின்றன . இத்தொகுப்பின் மூலம்
" நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
- இதற்கு இனிய சொற்களைப் பேசினால் கேட்பவருக்கு மட்டுமல்ல
பேசுபவருக்கும் மகிழ்ச்சியை தந்து புண்ணியம் சேரும் என்று அர்த்தம் .
- இதற்கு நெருங்கிப் பழகுபவரைப் பற்றியே புறம் பேசும் இவர் ஒரு
நாள் நம்மைப் பற்றியும் புறம் பேசுவார் என்று பயந்து நம்முடன் யாரும் பழக
மாட்டார்கள் என்று அர்த்தம் .
- அறிவில் மிகுந்தவரிடம் அவருக்கு இணையாகவும் சிறப்பாகவும்
அறிவில் குறைந்தவரிடம் பேசும் பொழுது எளிமையாகவும் புரியும்படி பேச வேண்டும். கவனச் சிதறலின்றி ஆழமாக இத்தொகுப்பை படித்தால் நம்முடைய “Speaking
Attitude” உடனே மாறிவிட வாய்ப்பிருக்கின்றது.
முகத்தான் அமர்ந்து இனிது
நோக்கும் பதிப்பாசிரியரை முத்துக்கமலம் இணைய இதழ் அகத்தான் இன்சொல்லி
வாழ்த்துகின்றது .
-எஸ்.எஸ்.பொன்முடி. |
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.