........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-29
பக்கம்-112 விலை -ரூ40.00 |
எனது கீதை
-கவிஞர்.குகன்-
நாகரெத்னா பதிப்பகம், |
பார்வை :
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இடம் பெறும்
கல்வி,
முயற்சி,
வேலை,
உழைப்பு,
பணம்,
அனுபவம், காதல்,
திருமணம், குழந்தை,
நட்பு,
காலம்,
குடும்பம்,
ஒற்றுமை,
வெற்றி தோல்வி, நம்பிக்கை, நகைச்சுவை,
மகிழ்ச்சி, கடவுள் என்பது போன்ற 25 தலைப்புகள்.
இந்தத் தலைப்புகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
அவசியமான ஒன்றாக இருந்தாலும் இவை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டுப் போயிருப்பதற்கான
காரணம் என்னவாயிருக்கும் என்கிற எண்ணத்தில் நூலாசிரியர் சிந்திக்க
முற்பட்டிருக்கிறார். அவருக்கு அவர் படித்த புத்தகங்கள், கிடைத்த நட்பு போன்றவை
ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த விளக்கங்களை, அனுபவங்களை நூலாக்க
முயற்சித்து வெற்றியும் கண்டிருக்கிறார்.
ஒவ்வொரு கட்டுரைக்கும் அவருடைய கருத்தைத்
தெரிவிக்கும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக தான் படித்த அல்லது கேட்ட
குட்டிக்கதைகள் மற்றும் தனக்கு
மின்னஞ்சலில்
வந்த கதைகளை இடையிடையே சொல்லி படிப்பதற்குச் சுவையாக்கி இருக்கிறார்.
இந்நூலில்,
"வேலை" எனும் தலைப்பின் கீழ் வரும்
"தனக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காக செய்ய
முடியாத வேலையை எல்லாம் ஒத்துக் கொண்டு இறுதியில் எந்த வேலையும் செய்ய முடியாமல்
ஓய்ந்து பொகும் அளவிற்கு உழைக்கக் கூடாது."
"குடும்பம்" என்கிற தலைப்பில்
"நாம் செய்யும் வேலை குடும்பத்தை
உயர்த்தும்படியாக இருக்க வேண்டுமே தவிர, குடும்பத்தை ஒதுக்கும்படியாக இருக்கக்
கூடாது"
"முயற்சி" எனும் தலைப்பில் இடம்
பெற்றுள்ள
"தோற்பவர்கள் பாதுகாப்பைத் தேடுகிறார்கள்.
வெற்றி பெறுபவர்கள் வாய்ப்பைத் தேடுவார்கள். தோல்வி என்பது குற்றமல்ல, நம்
முயற்சிகளில் உள்ள பிழை."
"ஒற்றுமை" எனும் தலைப்பில்
இடம்பெற்றிருக்கும்
"என்னதான் தனி மனிதன் சிந்தனை, முயற்சி,
தன்னம்பிக்கை என்று சொன்னாலும், சில இடங்களில் சாதித்து வெற்றிகளைக் குவிப்பது
ஒற்றுமையான முயற்சிதான்."
"நம்பிக்கை" எனும் தலைப்பில் இருக்கும்
"தன்னம்பிக்கை வந்தவுடன் கடவுள் மீது நம்பிக்கை
குறைந்து விட்டது. எந்தப் பிரச்சனையானாலும் நானே பார்த்துக் கொள்ள வேண்டும்
என்ற முடிவுக்கு வந்து விட்டேன். கடவுளிடம் சென்று முறையிடுவதைக் குறைத்து
விட்டேன்."
-என்கிற வாசகங்கள் நன்றாக இருக்கிறது.
இந்த வாசகங்கள் பலருக்கும் பொருத்தமானதாக இருக்கலாம்.
கவிஞர்.குகன் எழுதியிருக்கும்
இந்த "எனது கீதை" நூலை
வெளியிட்டுள்ள
சென்னை, நாகரெத்னா பதிப்பகம் ஒவ்வொரு தலைப்பையும் தனிப்பக்கத்தில்
துவக்காமல் தொடர்ச்சியாகக் கொண்டு சென்றிருப்பதும், பல பக்கங்களில்
அதிகமான அளவில் இடம்
பெற்றிருக்கும் எழுத்துப் பிழைகளைக் கவனிக்காமல் விட்டிருப்பதும் இந்நூலின்
குறைகளாகத் தெரிந்தாலும், நாம் தெரிந்து கொள்ள நிறைய தகவல்களும் இருக்கின்றன. |
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.