........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-39
பக்கம்-96 விலை:ரூ. 70
|
பாலும் சோறும் - முனைவர் தமிழப்பன் மெய்.மூ. - உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை, |
பார்வை:
தமிழகத்துப்
பெண்கள் தங்களது குழந்தைக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டி தமிழ்ப் பேச்சைச் சொல்லிக் கொடுத்ததெல்லாம் இப்போது எங்கும் பார்க்க முடியாது. அவசர யுகத்திலும், ஆங்கில வழிக்கல்வி மோகத்திலும் இன்றைய நாகரீகம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு அம்மா, அப்பா என்று சொல்லிக் கொடுத்த காலமெல்லாம் கரையேறிப் போய் விட்டது. பிறந்த குழந்தைக்கே மம்மி, டாடி என்று சொல்லிக் கொடுக்கும் அவலம் கிராமத்துத் குடும்பங்களிலும் கூட வழக்கத்துக்கு வந்து விட்டது. இந்த நிலையில்
தமிழ்மொழி மேல் பற்று கொண்ட பலரும் தமிழைக் காப்பாற்ற பல
வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர். அந்த வழிகளில் இந்நூலாசிரியரும் இந்த நூலின்
வழியில் ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். இளம்பெண்கள் தங்கள் குழந்தைக்குப் பால் கொடுக்கும் போதும், சோறு அளிக்கும் போதும் அந்தக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய தமிழ்ச் சொற்களை கவிதை வடிவில் சீம்பால், பருப்பு நெய்ச்சோறு என்ற இரண்டு தலைப்புகளின் கீழ் இரு பாகங்களாகப் பிரித்து வழங்கியிருக்கிறார். சீம்பால் எனும் தலைப்பில் மிகவும் குழந்தைப் பருவத்துக்கேற்ற வகையில் சிறு சிறு கவிதைகளாக பல சொற்களையும், சிறு கணக்குகளையும் சில வேறுபாடுகளையும் அந்தக் குழந்தைக்குப் புகட்டத் தந்திருக்கிறார். முதலை போலப் பாகற்காய்
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.