ஒரு சமயம் புத்தரும், அவரது சீடர்களும் காட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த ஒரு திருடன், அவர்கள் வைத்திருந்த ஒரு கிண்ணத்தை திருடிச் சென்று விட்டான்.
தூக்கம் கலைந்த புத்தர் நடந்ததை அறிந்தார். தன் சீடர்களை எழுப்பினார்.
"அவன் எடுத்துச்சென்ற கிண்ணம் ஓட்டையானது. பாவம்! இந்த நல்ல கிண்ணத்தை கொடுத்துவிட்டு வா!" என்று ஒரு சீடனிடம் கூறி, அந்த கிண்ணத்தை கொடுத்தார்.
அந்த சீடனும், திருடனை ஒருவழியாக தேடிப்பிடித்து அதை ஒப்படைத்தான்.
இதை எதிர்பார்க்காத அந்த திருடன் மனம் திருந்தி புத்தரின் சீடனாகவே மாறிவிட்டான்.
- இதுதான் அன்பின் பலம்.