நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான் ”நான் இங்கே அமரலாமா?”
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் அவள், “இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறாய்?” என்று சத்தமாகக் கேட்டாள்.
அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.
அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. அங்கிருந்து சென்று ஒரு காலி இருக்கையைத் தேடி அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்று அவள் அவனருகில் சென்று, “நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி. உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அப்படிப் பேசினேன்” என்றாள்.
உடனே அந்த இளைஞன், “என்ன? ஒரு இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? இது மிக அதிகம்” என்று சத்தமாகச் சொன்னான்.
இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.
அவள் குறுகிப் போனாள்.
அப்போது அவன் சொன்னான்.
”நான் ஒரு வழக்கறிஞர். யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...!”
- ஆங்கில இதழ் ஒன்றில் படித்தது