இடத்தைக் காலி பண்ணுங்க...!
அதிகாலை நேரம். கணவன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான். மனைவி வேகவேகமாக அவனை எழுப்பினாள். “சீக்கிரம் எழுந்திருங்க... உங்க துணிகளையெல்லாம் எடுத்து வையுங்க... எனக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு” என்றாள்.
“சந்தோசமாயிருக்கு. இப்ப நாம எங்கே போகிறோம்? ஊட்டியா? சிம்லாவா?” என்றான் கணவன்.
“நீங்க எங்கே வேண்டுமானாலும் போங்க...! மதியத்துக்குள்ள நீங்க என் வீட்டைக் காலி செய்திடுங்க...” என்றாள் மனைவி.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.