இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

அம்பலப்புழா பால் பாயாசம்

கணேஷ் அரவிந்த்


கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பால் பாயாசம் வழங்கப்படுகிறது.

இக்கோயிலில் பால் பாயாசம் வழங்கப்படுவதற்கு ஒரு கதை இங்குள்ளவர்களால் சொல்லப்படுகிறது. வாங்க, அந்தக் கதையைப் படிக்கலாம்;

அம்பலப்புழையை ஆண்ட அரசனுக்குச் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது. அத்துடன் தன்னை யாரும் சதுரங்க விளையாட்டில் வெல்ல முடியாது என்கிற எண்ணமும், அதன் மூலம் ஏறபட்ட கர்வமும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் ஒரு நாள், வயதான துறவி ஒருவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். அவரை வரவேற்று விருந்தளித்த அரசன் அவரிடம், தன்னுடைய சதுரங்க விளையாட்டுப் பெருமையைப் பேசிக் கொண்டே இருந்தான். தொடர்ந்து, இந்தச் சதுரங்க விளையாட்டில் தன்னை யாரும் தோற்கடிக்க முடியாது என்றும் சொன்னான்.

உடனே அந்தத் துறவி, “மன்னா, சதுரங்க விளையாட்டில் நீ திறமையானவன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நாமிருவரும் சேர்ந்து சதுரங்கம் விளையாடலாமா? என்றும் கேட்டார். அரசனும் அதற்குச் சம்மதித்தான்.

அரசன் அந்தத் துறவியிடம், “இந்தப் போட்டியில் நான் வெற்றி பெற்றால், எனக்குப் பரிசாகத் தர உங்களிடம் என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.

அந்தத் துறவி, “மன்னா, துறவியான என்னாலும் உனக்கு நல்ல பரிசைத் தர முடியும். ஒருவேளை, இந்தச் சதுரங்கப் போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டால் நீ எனக்கு என்ன பரிசு தருவாய்” என்று கேட்டார்.

உடனே அரசன், “சுவாமி, இந்தப் போட்டியில் நான்தான் வெற்றியடைவேன். நீங்கள் சொல்வது போல் ஒரு வேளை நீங்கள் வெற்றி பெற்று விட்டால், நீங்கள் கேட்கும் பரிசை வாங்கிக் கொள்ளலாம்” என்றான்.

அதைக் கேட்ட துறவி, “மன்னா, எனக்குப் பரிசாகப் பெரிதாக எதுவும் தர வேண்டாம், சதுரங்கத்தில் இருக்கும் 64 கட்டங்களுக்கும் நெல்மணிகளைப் பரிசாகத் தந்தால் போதும்” என்றார்.

உடனே அரசன், “பரிசுப் பொருளாக வெறும் 64 நெல்மணிகள் உங்களுக்குப் போதுமா?” என்று கேட்டான்.

உடனே துறவி, “மன்னா, துறவியான எனக்கு இந்தப் பரிசு போதும். சதுரங்கக் கட்டத்தில் முதல் கட்டத்திற்கு ஒரு நெல்மணி தர வேண்டும், இரண்டாவது கட்டத்தில் இரண்டு, மூன்றாவது கட்டத்தில் நான்கு, நான்காவது கட்டத்தில் பதினாறு, ஐந்தாவது கட்டத்தில் 256 என்று அதன் மடங்குகளாகத் தர வேண்டும் அவ்வளவுதான்” என்றார்.

அரசன் இந்த ஆட்டத்தில் தான் வெற்றி பெற்று விடுவோம் என்கிற கர்வத்தில் சிறிதும் சிந்திக்காமல் அதற்கு ஒப்புக் கொண்டான்.

போட்டி தொடங்கியது. சில மணி நேரத்தில் அந்தத் துறவி சதுரங்க ஆட்டத்தில் வெற்றியடைந்தார்.



அரசன் ஒரு துறவியிடம் தோல்வியடைந்ததை நினைத்து வருந்தினான். பின்னர் அவன் துறவிக்கு நெல்மணிகளைப் பரிசாகக் கொண்டு வந்து தரும்படி உத்தரவிட்டான்.

முதல் கட்டத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது கட்டத்தில் இரண்டு, மூன்றாவது கட்டத்தில் நான்கு, நான்காவது கட்டத்தில் பதினாறு என்று பெருக்கி நெல்மணிகளை வழங்கிக் கொண்டேயிருந்தான். சில கட்டங்களுக்குள் அவனுடைய களஞ்சியத்திலிருந்த நெல்மணிகள் அனைத்தும் காலியாகி விட்டன. அடுத்த சில கட்டங்களுக்கு அருகிலிருந்த அரசர்களிடம் கடனாகப் பெற்று நெல்லை வழங்கினான். அப்படியும், தொடர்ந்து நெல்மணிகளைத் தரமுடியாத நிலை ஏற்பட்டது. அப்போதுதான் அவனுடைய தவறு அவனுக்குப் புரிந்தது.

துறவியின் காலில் விழுந்த அவன், தன்னால் சொன்ன பரிசைத் தர முடியவில்லை என்று சொல்லி மன்னிக்கும்படி வேண்டினான்.

அப்போது, அந்தத் துறவியின் உருவிலிருந்த கிருஷ்ணர் அவனுக்குக் காட்சியளித்து, “மன்னா, உன்னிடமிருக்கும் விளையாட்டுத் திறனைப் பெரிதாக நினைத்துக் கர்வம் கொண்ட உனக்கு நல்வழி காட்டவே நான் இங்கு வந்தேன். எனக்கு இன்று நீ பட்ட கடனை உடனடியாக அடைக்க வேண்டாம், சிறிது சிறிதாக அடைத்தால் போதும். அம்பலப்புழாவிலிருக்கும் எனது கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயாசத்தை வழங்கிக் கொண்டே இரு. அது போதும்…” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

அன்று முதல், அரசனால் வழங்கப்பட்ட பால் பாயாசம் அம்பலப்புழா கோயிலில் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p181.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License