இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு

உ. தாமரைச்செல்வி


திருமணமான பெண்கள் தங்கள் கணவர் உடல் நலத்துடன் ஆயுள் காலமும் அதிகரித்து வாழ்ந்திட வேண்டி சாவித்திரி நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர். சுமங்கலி நோன்பு, காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, காரடையான் நோன்பு என்று வேறு சில பெயர்களிலும் இந்த நோன்பு அழைக்கப்படுகிறது. இந்த நோன்பு எப்படித் தொடங்கியது என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?

கணவனை மீட்ட சாவித்திரி

சாளுவதேசத்து அரசன் ஒரு போரில் நாட்டை இழந்து தனது மனைவி மற்றும் மகன் சத்தியவான் ஆகியோருடன் காட்டில் வசித்து வந்தான். பார்வையற்ற நிலையிலிருந்த அரசன் மற்றும் அரசி ஆகியோரை இளவரசன் சத்தியவான், அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பராமரிப்புகளையும் செய்து, எந்தக் குறைகளுமில்லாமல் அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மந்திரதேசத்து மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி ஒரு நாள் அந்தக் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றாள். அங்கு பார்வையற்ற பெற்றோர்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்து வந்த சத்தியவானைப் பார்த்தாள். சத்தியவான் பார்வையற்ற பெற்றோர்க்குச் செய்த சேவைகள் அவளை மிகவும் கவர்ந்தன. காட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்பிய சாவித்திரி சத்தியவானையே திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தாள். அவள் தந்தையிடம், காட்டிற்குள் தான் பார்த்த சத்தியவானையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தாள்.

இந்நிலையில், சாவித்திரியின் தந்தையைச் சந்தித்த நாரதர், சாவித்திரியின் விருப்பத்திற்காகச் சத்தியவானுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும், அவன் இன்னும் ஓராண்டு காலத்தில் இறந்து விடுவான் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி தன்னுடைய விருப்பத்திலிருந்து மாறாமல், சத்தியவானையே திருமணம் செய்து கொள்வது என்று உறுதியாக இருந்தாள். அவளுடைய மன உறுதிக்காக அவளது தந்தையும் வேறு வழியின்றி, அவளைச் சத்தியவானுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணத்திற்குப் பிறகு, சாவித்திரி தன் கணவனுடன் காட்டிற்குள் சென்று வசிக்கத் தொடங்கினாள். அரண்மனையில் பல வசதிகளுடன் வாழ்ந்த அவளுக்குக் காட்டில் பல்வேறு வசதிக் குறைபாடுகள் ஏற்பட்டன. இருப்பினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அங்கு கணவன் மற்றும் அவனது பார்வையற்ற பெற்றோர்களையும் அன்புடன் கவனித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.



நாரதர் சொன்னபடி ஒரு வருட காலத்தில் சத்தியவானின் ஆயுட் காலம் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியாமல் அவனுடனேயே இருந்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து காட்டில் ஒரு இடத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது சத்தியவான் திடீரென மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மன் எடுத்துக் கொண்டு சென்றார். சாவித்திரியும் தன் கணவனின் உயிரைத் திரும்பப் பெற்றிடும் நோக்கத்துடன் எமனைப் பின் தொடர்ந்து சென்றாள். கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், மன உறுதியுடன் அவனையேத் திருமணம் செய்து கொண்டதுடன், பார்வையற்ற முதியவர்களுக்குத் தொடர்ந்து அவள் சேவை செய்திருந்ததாலும், அவள் பார்வைக்குக் காட்சியளித்த எமதர்மன் அவளைத் தன் பின்னால் தொடர்ந்து வராமல், திரும்பிப் செல்லும்படி அறிவுறுத்தினார்.

ஆனால், சாவித்திரி அதை ஏற்கவில்லை. அவள் எமதர்மனிடம், தான் கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும், தான் கற்புக்கரசி என்பது உண்மையெனில், தன் கணவரது உயிரைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டாள். அவள் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த எமதர்மன், இறப்புக்குப் பிறகு இந்தப் பூமியில் யாருக்கும் வாழ்வு கிடையாது என்றும், அதற்குப் பதிலாக எந்த வரம் கேட்டாலும் தருவதாகவும் கூறினார்.

சாவித்திரி சூழ்நிலையை உணர்ந்து, “என் கணவரின் பெற்றோர்க்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கும் நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும். அதற்கான வரத்தை அருள வேண்டும்” என்று கேட்டாள். அவள் கேட்ட வரத்தின் உள்நோக்கம் குறித்துச் சிறிதும் சிந்திக்காத எமதர்மன் அந்த வரங்களை அவளுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்.

உடனே சாவித்திரி, “நீங்கள் எனக்குக் கொடுத்தபடி நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் என்னுடன் இருந்தாக வேண்டும்...! எனவே எனக்கு அவரது உயிரை மீண்டும் திரும்பக் கொடுங்கள்” என வேண்டினாள். எமதர்மனும் அவளது அறிவுத் திறனை வியந்து பாராட்டியதுடன் சத்தியவானின் உயிரை அங்கேயே அவளிடம் விட்டுச் சென்றார்.



சாவித்திரி நோன்பு

சாவித்திரி தன் கணவனை உயிருடன் மீட்டதுடன், தன் கணவனுக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுக் கொண்டதைப் போல், திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் காலமும் அதிகரித்திட வேண்டி சாவித்திரி நோன்பு கடைப்பிடிக்கின்றனர். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் வேளையில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

காரடையான் நோன்பு

தமிழர்கள் ஆண்டை சித்திரை மாதத்திலிருந்து இரு மாதங்களாகக் கொண்டு இளவேனில் காலம், முதுவேனில் காலம், கார் காலம், குளிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என்று ஆறு பொழுதுகளாகப் பிரித்திருக்கின்றனர். கார் காலமான ஆவணி, புரட்டாசியில் விளையும் நெல்லிலிருந்து எடுக்கப்பட்ட பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும், அதனுடன் இனிப்பும் சேர்த்துத் தயாரிக்கும் காரடை எனும் உணவுப் பொருளை சாவித்திரி நோன்பு வழிபாட்டிற்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த நோன்பு காரடையான் நோன்பு என்கிற பெயரிலேயே அதிகமாக அழைக்கப்படுகிறது.



நோன்பு கடைப்பிடிக்கும் முறை

கணவனின் உடல் நலத்துடன் ஆயுள் காலமும் அதிகரித்து வாழ்ந்திட வேண்டி சாவித்திரி நோன்பு கடைப்பிடிக்கும் திருமணமான பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜையறையை சுத்தம் செய்து, ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து, அக்கலசத்திற்குச் சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறைக் கட்டுகின்றனர். அதனருகில் அம்மன் படம் ஒன்றை வைத்து, அந்த அம்மன் படத்தைக் காமாட்சியாகவோ அல்லது சாவித்திரியாகவோ மனதில் நினைத்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டில் அம்மனுக்குக் கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் வழிபாட்டுப் பொருளாகப் படைத்து வழிபாடு செய்கின்றனர். அதன் பிறகு, சாவித்திரி நோன்பு வழிபாடு செய்த பெண்கள், தங்களுடைய மங்கலக் கயிற்றைக் கழற்றி விட்டு, அதற்குப் பதிலாக்க் கலசத்தில் கட்டி வழிபட்ட புதிய மஞ்சள் கயிற்றை மங்கலக் கயிறாகக் கட்டிக் கொள்கின்றனர். இந்த வழிபாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட ஒற்றைப்படை வரிசையில் மஞ்சள் கயிற்றையும் வைத்து வழிபடுகின்றனர். வழிபாட்டில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறுகளைத் திருமணமான பெண்களுக்கு மங்கலக் கயிறுகளாக வழங்கி அவர்களது நல்லாசிகளையும் பெறுகின்றனர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p117.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License