1. ஓமாம்புலியூர் - தட்சிணாமூர்த்தி உமாதேவிக்குப் பிரணவப்பொருள் உபதேசித்தது.
2. உத்திரகோசமங்கை - பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
3. இன்னம்பர் - அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
4. திருவுசாத்தானம் - இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் ராமர் மந்திர உபதேசம் பெற்றார்.
5. ஆலங்குடி - சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டுப் பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானைத் தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
6. திருவான்மியூர் - அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
7. திருவாவடுதுறை - அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
8. சிதம்பரம் - பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
9. திருப்பூவாளியூர் - நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
10. திருமங்களம் - சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
11. திருக்கழுக்குன்றம் - சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
12. திருமயிலை - ஆயிரம் முனிவர்கள் அறநெறிகளை அறிவுரையாகப் பெற்றது.
13. செய்யாறு - வேதம் பற்றிக் கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
14. திருவெண்காடு - நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோபதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர் பெற்றார்.
15. திருப்பனந்தாள் - அம்பாள் சுவாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
16. திருக்கடவூர் - பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
17. திருவானைக்கா - அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
18. மயிலாடுதுறை - குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
19. திருவாவடுதுறை - அகத்திய முனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
20. தென்மருதூர் - ஆயிரம் முனிவர்களுக்கு உபதேசம் அருளியது.
21. விருத்தாசலம் - இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரைத் தன் தொடை மீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
22. திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்குக் குருத்த மரத்தடியில் உபதேசம்.
23. இராமேஸ்வரம் - திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும் உரைத்தல்.
24. உத்தரமாயூரம் - ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
25. காஞ்சி - ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
26. திருப்புறம்பயம் - சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
27. விளநகர் - அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
28. திருத்துருத்தி - சிவன் பிரம்மசாரியாய் வேதத்தைத் தாமே சொன்னது.
29. கரூர் - ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
30. திருவோத்தூர் - ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்