எதிர்காலத்தில் நடக்கபோகும் நல்லதையும், கெட்டதையும் சில கனவுகள் காட்டுகின்றன என்கிற நம்பிக்கை நம் நாட்டில் நிலவி வருகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் கனவுகளைக் கண்டு, அந்த கனவு நமக்கு நினைவில் இருந்தால், அது நிச்சயம் நடக்கும் எனவும் வேதங்கள் கூறுகின்றன.
ஒரு ஆணின் கனவில் பெண்கள் வந்தால், அதற்கு என்ன பொருள் என்பதைப் பார்க்கலாம்... வாங்க...
1. ஆண், தன் கனவில் மனைவி அல்லது நிச்சயித்தப் பெண்ணுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வது போன்று வந்தால், அந்த ஆணின் திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையப் போகிறது என்று பொருள்.
2. ஆண் வெள்ளை உடை அணிந்த ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பது போன்று கனவு கண்டால், அந்த ஆணின் வாழ்வில் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று பொருள்.
3. ஆணின் கனவில் ஒரு பெண் சதுரங்க விளையாட்டு அல்லது வேறு ஏதேனும் விளையாட்டு விளையாடுவது போன்று வந்தால், அந்த ஆணின் விரைவில் பெயரும், புகழும் மேம்படப் போகிறது என்று பொருள்.
4. ஆணின் கனவில் ஒரு பெண் நடனமாவது போன்று வந்தால், அந்த ஆணின் திருமணம் அல்லது காதல் வாழ்வில் முறிவு ஏற்படப் போகிறது என்று பொருள்.
5. ஆண் தன் கனவில் திருமணக் கோலத்தில் ஒரு பெண் அழுவது போன்று கண்டால், அந்த ஆணின் மாமனார், மாமியாருடன் சண்டை வரும் எனப் பொருள்.
6. ஆண் கனவில் தன் வாழ்க்கைத் துணைக்கு வைர ஆபரணங்களைப் பரிசாகக் கொடுப்பது போன்று கண்டால், அந்த ஆண் திருமண வாழ்வில் கூடிய விரைவில் பிரச்சனையைச் சந்திக்கப் போகிறார் என்று பொருள்.
7. ஆணின் கனவில் ஒரு வெள்ளையான பெண் அவனால் கவரப்பட்டால், அந்த ஆணின் நிதி நிலைமை மேம்படும். அதுவே அப்பெண் நன்றி சொல்லிச் சென்றால், எதிர்காலத்தில் உங்களது பூர்வீக சொத்து உங்களை வந்து சேரும் என்று பொருள்.
8. ஆண் கனவில் ஒரு தேவதையைக் கண்டால், அந்த ஆண் எதிர்காலத்தில் பணக்காரர் ஆவதோடு, வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியமே இருக்காது என்று பொருள்.
9. ஆண் தன் கனவில் மனைவி அல்லது காதலிக்கு நன்றி சொல்லிச் செல்வது போன்று கண்டால், அந்த ஆண் விரைவில் உடல்நலக் குறைவால் துன்பமடையப் போகிறான் என்று பொருள்.
10. ஆண் தன் கனவில் ஒரு பெண்ணின் நிர்வாணப் படத்தை வரைவது போன்று கண்டால், அந்த ஆணுக்கு கெட்ட நேரம் தொடங்கி விட்டது என்று பொருள்.