வீட்டில் பல்லி ஒலி எழுப்புவதைத் தமக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைக்கான அறிகுறியாக மக்கள் நம்புகின்றனர்.
1. ஒரு சொல் சொன்னால் துன்பம்.
2. இரண்டு சொல் சொன்னால் தனலாபம்.
3. மூன்று சொல் சொன்னால் மரணம்.
4. நான்கு சொல் சொன்னால் சௌக்கியம்.
5. ஐந்து சொல் சொன்னால் உறவினர் வருகை.
6. ஆறு சொல் சொன்னால் பீடை.
7. ஏழு, எட்டு சொல் சொன்னால் அகமலிவு.
பல்லி எந்த திசையில் இருந்து சொல்கிறதோ அதற்கு ஏற்பவும் பலன்கள் உண்டு.
1. வடக்குத் திசை: சுபச்செய்தி வரும்.
2. தெற்குத் திசை: எதிர்பாராத சுக சவுகரியங்களையும், எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் அளிக்கும்.
3. கிழக்குத் திசை: உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக பொருள்.
4. மேற்குத் திசை: சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
5. தென்கிழக்குத் திசை: உடனடியாக கலகம் வரும்.
6. தென்மேற்குத் திசை: உறவினர்கள் வருகை தருவார்கள்.
மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். சுயமனையில் வலத்திலும், வாசலிலும் உச்சத்திலும் சொன்னால் பண வரவு உண்டாகும்.