* இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே.
* பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்.
* நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை.
* சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
* வைத்தியன் கையைப் பிடிப்பான் ஜோதிடன் காலைப் பிடிப்பான்.
* கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்.
* ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க.
* குரு பார்க்க கோடி நன்மை.
* கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்.
* மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்.
* பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
* மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்.
* துலா கேது தொல்லை தீர்க்கும்.
* சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்.
* சுவாதி சுக்ரன் ஓயா மழை.
* மறைந்த புதன் நிறைந்த கல்வி.
* சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
* சித்திரை அப்பன் தெருவிலே.
* பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்.
* விதி போகும் வழியே மதி போகும்.
* அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்.
* குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
* சனி பார்த்த இடம் பாழ்.
* சனி நீராடு.
* விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
* ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு.
* பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்.
* எட்டில் சனி நீண்ட ஆயுள்.
* சனி பகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை.
* அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி.
* குரு நின்ற இடம் பாழ்.
* சனி பார்க்கும் இடம் பாழ்