Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

பிறந்த நட்சத்திரங்கள் - பொதுப்பலன்கள்

உ. தாமரைச்செல்வி


ஒவ்வொரு பிறந்த நட்சத்திரங்களுக்கேற்ப அவர்களின் குணநலன்களும், வாழ்வும் அமைகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பொதுவான பலன்கள் கீழேத் தரப்பட்டிருக்கின்றன.

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அடிப்படையில் புத்திசாலிகள். அதே நேரம் அதிக அளவில் விவாதங்கள் செய்பவர் ஆடம்பர பிரியர். செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசியில் பிறந்தவர்கள் இவர்கள் பிறருக்கு அறிவுரை சொல்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அன்பும் நல்ல பண்புகளும் ஒரு சேர அமையப் பெற்ற அஸ்வினி நட்சத்திரக்காரர்கள், யாருக்காகவும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

பரணி

நன்றி மிகுந்த குணவான்கள் இந்த நட்சத்திரக்காரர்கள். பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்பதற்கேற்பப் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தலைமைப் பண்பு மிகுந்தவர்கள். நல்ல கல்வியறிவு பெற்ற தைரியசாலிகள். பெரும்பாலும் பொறியியல், சட்டம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவார்கள்.

கார்த்திகை

பக்தியும் மென்மையான குணமுடையவர்கள் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள். தலைமைப் பண்பு மிக்க இவர்கள் மற்றவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு வழி நடத்தி உதவி செய்யும் வல்லமை உடையவர்கள். பெரும்பாலும் அரசுப் பணிகள், இலக்கியம், சுரங்கம் தொடர்பான இடங்களில் இந்த நட்சத்திரக்காரர்கள் பணி புரிவார்கள்.

ரோகிணி

கிருஷ்ண பகவானின் அவதார நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். வசீகரமான இவர்கள் ஊர் உலகம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவர்கள். அறிவு, அந்தஸ்தை முக்கியமல்ல என்று அன்புக்கே அதிக முக்கியத்துவம் தரக்கூடியவர்கள்.


மிருகசீரிடம்

துணிச்சல் மிகுந்த மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் அடிப்படையில் தலைமை தாங்கும் பண்பு உடையவர்கள், கொண்டவர்கள். அதே நேரம் எளிதில் நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு நிதித்துறை, கணக்குத் தணிக்கை, மின்சாரம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் பொருத்தமாக இருக்கும்.

திருவாதிரை

சிவபெருமானின் நட்சத்திரத்தை பெற்ற இவர்கள் அடிப்படையில் பல்துறை வித்தகர்களாக விளங்குவார்கள். எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அந்தப் பணியை திறம்பட முடிக்கும் மிகுந்த திறமைசாலிகள். எதிலும் ஆழ்ந்த அறிவும் திறமையும் பெற்றிருப்பார்கள். பொதுவாக கல்வி, எழுத்து, பத்திரிகை, விளம்பரத்துறை, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

புனர்பூசம்

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகம் கொண்ட இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராமபிரானைப் போல் வாக்கு தவறாதவர்களாக இருப்பார்கள். தனக்கென்று தனித்துவமான சில பண்புகளையும் திறமைகளையும் கொண்டிருப்பார்கள். தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். சூழ்நிலையை அனுசரித்துச் செல்பவர்கள். கல்வித் துறை, சட்டம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய தொழில்கள் இவர்களுக்கு அமையக்கூடும்.

பூசம்

பிறரை மதிப்பதிலும், பக்தியில் நாட்டம் அதிகமும் உள்ள பூச நட்சத்திரக்காரர்கள், தன்னுடைய லட்சியத்தை அடையும் வரை ஓயமாட்டார்கள். எதிலும் நேர்மையாக இருப்பதையே விரும்பும் இவர்கள் பிறருக்கு அடிமையாக வாழ்வதை விரும்பாதவர்கள். பெட்ரோ கெமிக்கல், விவசாயம் சார்ந்த தொழில்கள் மற்றும் அரசியலில் சிறந்து விளங்குவார்கள்.

ஆயில்யம்

ஆதிசேஷனின் அம்சமான லட்சுமணனின் நட்சத்திரம் ஆயில்யம். எவ்வளவு மோசமான வறுமை நிலையில் பிறந்திருந்தாலும், எப்படியும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கையை அடையும் பாக்கியம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு. பிறருக்கு உதவி புரிவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். விவசாயம் சார்ந்த தொழில்கள், நீதித்துறை, கலைத்துறை போன்றவற்றில் ஆயில்ய நட்சத்திரத்தினர் ஜொலிப்பார்கள்.

மகம்

மற்றவர்களை அனுசரித்துச் செல்வதிலும், சூழ்நிலைக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்வதில் கில்லாடிகள் மக நட்சத்திரத்துக்காரர்கள். எவ்வளவுதான் செல்வாக்கும் வசதியும் இருந்தாலும் இவர்களின் மனதில் பெரும்பாலும் மண வாழ்க்கைப் பற்றிய தெரியாத கவலை இருக்கும். தலைமைப் பதவிக்கு தகுந்தவர்கள். முடிவுகளை விரைந்து எடுக்க முடியாமல் சில நேரங்களில் தவித்திடும் குணம் கொண்டவர்கள். அரசியல், தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிப்பார்கள்.

பூரம்

பரந்த மனப்பான்மை கொண்ட பூர நட்சத்திரக்காரர்கள் பிறருக்கு வலியப்போய் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்கள், தொழிற்சாலைகள், உணவு விடுதி, விவசாயம், வியாபாரம் அரசுத்துறை ஆகிய தொழில்கள் அமைய வாய்ப்புகள் அதிகம்.


உத்திரம்

சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருக்கும் உத்திர நட்சத்திரத்தினர் வாழ்க்கையில் லட்சியத்துடன் முன்னேற விரும்புபவர்கள். நாணயமானவர்கள். அதீத பக்தி உணர்வுடையவர்கள். நன்றி மறவாதவ குணம் கொண்ட இவர்கள் கடல் சார்ந்த தொழில்கள், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

அஸ்தம்

நன்மைகள் செய்வதே வாழ்வின் தவப்பயன் என்று வாழும் அஸ்த நட்சத்திரக்காரர்கள், அனைவருக்கும் நன்மைகள் செய்வர். அதே நேரம் பிறரும் தங்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகம் எதிர்பார்ப்பு உள்ளவர்கள் இவர்கள். அடிப்படையில் இந்த நட்சத்திரத்தினர் பெரும்பாலும் கலாரசிகர்களாகவும், ஆபரண பிரியர்களாகவும் விளங்குகின்றனர். பொதுவாகக் கலைத்துறை, வியாபாரம், பதிப்புத்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

சித்திரை

அடிப்படையில் தலைமைப் பண்பும் சிறந்த ஆளுமைத் திறனும் கொண்டவர்கள். அடுத்தவருக்கு ஆபத்து என்றால், உடனே ஓடோடிச் சென்று உதவி செய்யும் குணம் படைத்தவர்கள். பெருமளவில் தெய்வ பக்தி மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள். ஜோதிடம், நீதித்துறை, மருத்துவம், அறிவியல் சார்ந்த துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

சுவாதி

சுதந்திரமாக வாழ விரும்பும் சுவாதி நட்சத்திரக்காரர்கள் அன்புக்குக் கட்டுப்படுவார்கள் ஒரு நாளும் அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டார்கள். சுகபோகியான இவர்கள் பழக இனியவர்கள். காவல் துறை, அரசு நிர்வாகம், உணவு விடுதி, அலங்காரப் பொருட்கள் விற்பனை ஆகியவற்றில் கொடிகட்டிப் பறப்பார்கள் இவர்கள்.

விசாகம்

மனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். நிர்வாகம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் மீண்டு வந்துவிடுவார்கள். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தாலும் முயற்சி செய்து முன்னேறிவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவார்கள். மற்றபடி கல்வித்துறை, பதிப்பகம் போன்ற துறைகளில் ஈடுபடுவர்.

அனுஷம்

மற்றவர்களிடம் அதிக அன்பு செலுத்தும் அனுஷ நட்சத்திரக்காரர்கள் பல நற்பண்புகளைக் கொண்டிருப்பார்கள். எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் சமாளித்து இறுதியில் வெற்றி பெறும் திறமையாளர்கள். பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். சிலர் மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபடுவர். நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர் என்று பலராலும் பாராட்டு பெறுபவர்கள் இவர்கள்.

கேட்டை

உண்மையாக இருப்பதுடன் மற்றவர்களும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் கேட்டை நட்சத்திரத்தினர் தெய்வபக்தி மிக்கவர்கள். சாஸ்திரங்களில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பத்திரிகைத்துறை, ராணுவம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.


மூலம்

தலைமைப் பொறுப்பு வகிக்கும் திறமை படைத்தவர்கள் மூலம் நட்சத்திரக்காரர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர்கள் பார்மசி, விவசாயம் சார்ந்த தொழில்களில் சிறந்து விளங்குவார்கள். சிலர் கல்வித்துறையிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

பூராடம்

தன்னம்பிக்கை நிறைந்தவர்களான பூராட நட்சத்திரக்காரர்கள், ஒருவர் கஷ்டப்படுவதாகத் தெரிந்தால், ஓடிச்சென்று உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். வாக்குவாதத்தில் வல்லவர்கள் அதே நேரம் தங்கள் கடமையில் கருத்தாக உள்ளவர்கள் இவர்கள்.

உத்திராடம்

கலையில் ஆர்வமும் துணிச்சலும் மிகுந்தவர்கள் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள். இவர்களுக்கு அவ்வப்போது ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் கடமைகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மருத்துவம், கல்வி, வங்கி, ஆன்மிகம் சார்ந்த துறைகளில் இவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

திருவோணம்

மக்களின் அன்பும் ஆதரவும் பெற்றிருக்கும் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சாதுர்யமான அறிவைப் பெற்றிருப்பார்கள். நட்சத்திரங்களில் 'திரு' என்ற சிறப்புடன் அழைக்கப்படும் நட்சத்திரங்கள் திருவாதிரையும் திருவோணமும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடவுள் பக்தி நிறைந்தவர்களான திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுரங்கம், பெட்ரோலியம், இயந்திரத் தொழில் போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

அவிட்டம்

தவறாமல் நீதி நேர்மையைக் கடைப்பிடிக்கும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தவறுகளைத் தட்டிக்கேட்க அஞ்சமாட்டார்கள். தலைமை தாங்கும் தகுதி பெற்ற இவர்கள் காவல்துறை, ராணுவத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை, இரும்புத்தொழில், பிரிண்டிங் போன்ற தொழில்களில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். கடமை தவறாத குணம் கொண்டவர்கள் அவிட்ட நட்சத்திரக்காரர்கள்.

சதயம்

வசீகரமான சதயம் நட்சத்திரக்கார்கள் திறமையாகச் செயல்படுபவர்கள். மிகுந்த ஒழுக்கமுடையவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். மனதில் இனம் தெரியாத கவலையோ சஞ்சலமோ இவர்களை அவ்வப்போது வாட்டி எடுக்கும். ஆனால், இயல்பிலேயே இவர்களுக்கு இருக்கும் தெய்வ பக்தியினால் உடனே சமாளித்துக் கொள்வார்கள். வானியல் ஆராய்ச்சி, ஜோதிடம், பத்திரிகை போன்ற துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

பூரட்டாதி

இரக்க சுபாவம் கொண்ட பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அதிக நிர்வாகத் திறமை கொண்டவர்கள். குடும்பத்தை அதிகம் நேசிப்பவர்கள். அடிக்கடி எதையாவது நினைத்துக் கவலைப்படுவது இவர்களது வாடிக்கை. கல்வியறிவில் சிறந்து விளங்கும் இவர்கள் கல்வித்துறை மற்றும் வங்கி சார்ந்த பணிகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள்.


உத்திரட்டாதி

சாதுர்யமாகப் பேசும் திறன் படைத்த உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களான இவர்களில் பலர் ஆபரணப் பிரியர்கள் தானும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வமும் திறமையும் அதிக உள்ளவர்கள். சுரங்கம், இயந்திரங்கள், இரும்புப் பொருட்கள், உணவு விடுதி போன்றவை இவர்களுக்கு உரிய தொழில்களாம்.

ரேவதி

துணிச்சலும் நேர்மையும் கொண்ட ரேவதி நட்சத்திரக்காரர்கள் சுகபோகத்தில் நாட்டம் கொண்டவர்கள். அதிகம் தற்புகழ்ச்சி விரும்புபவர்கள். அதே நேரம், பழக இனியவர்கள். கல்வி அறிவும், அனுபவ அறிவும் நிரம்பப் பெற்ற இவர்கள், எல்லோருக்கும் நன்மையை மட்டுமே நினைப்பவர்களாக இருப்பார்கள். நிதித்துறை, நீதித்துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p142.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License