இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி யாருக்கு அமையும்?

1. லக்னாதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திர கோணத்தில்அமையப் பெறுவது மிகவும் அற்புதமான அதிகாரம் மிகுந்த கல்வியைஏற்படுத்தும்.
2. செவ்வாய் ஜாதகத்தில் பலம் பெற்று 3, 6, 10, 11 போன்ற உபஜயஸ்தானங்களில் அமையப் பெற்று லக்னாதிபதி அல்லது குருவின் பார்வையைப் பெற்றால் இந்திய ஆட்சிப்பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS) போன்ற கல்வி பயிலும் வாய்ப்பு, ஆற்றல் உண்டாகிறது.
3. சந்திரன், சூரியன் இருவரில் ஒருவராவது ஆட்சி உச்சம் பெற்று அல்லது குருபார்வை பெற்றிருந்து, பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி போன்ற உயர்கல்வி கற்று பட்டம் பதவிகளைப் பெறும் யோகம் அமைகின்றது.
4. சனி பகவான் காப்பீட்டுத் துறைக்கு (Insurance) காரகம் வகிப்பவர், எட்டாம் வீடு காப்பீட்டுத்துறை நிலையிலானதாகும்.
5. எட்டாம் வீட்டதிபதி சனி + புதனுடன் இணைந்து பத்தில் வலு பெற்றால், குறிப்பாக, குரு போன்ற சுபகிரக பார்வை பெற்றால் கற்கும் கல்வியால் காப்பீட்டுத்துறையில் அதிகாரியாகப் பணி செய்யகூடிய ஆற்றல் ஏற்படும்.
6. சூரியன் + செவ்வாய்,பத்தில் அமையப் பெற்றாலே நிர்வாகம் செய்யும் திறமை, அதனைச் சார்ந்த கல்வி கற்கும் யோகம் அமைகின்றது.
7. பத்தில் சூரியன் + செவ்வாய் + புதன் சேர்க்கைஉண்டானால், கணைக்கியல் துறையில் (Auditing) கல்வி கற்று வருமானவரித்துறை (Income Tax Department) மற்றும் வங்கி (Bank) போன்றவற்றில் அதிகாரியாகும் வாய்ப்பு அமைகின்றது.
8. செவ்வாய் பத்தில் அமையப் பெறுவது திக் பல அமைப்பாகும். இந்த திக்பல அமைப்பு பெற்றவர்களே மிகச்சிறந்த நிர்வாகியாகும் யோகம் பெறுகிறார்கள்.
9. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று 4, 10ஆம் அதிபதி சேர்க்கை பெற்றாலும் 4,10ல் அமைந்தாலும் நிர்வாகம் சார்ந்த கல்வி கற்கும் யோகம் உண்டாகும்.
10. பத்தாம் வீட்டில் சூரியன் + செவ்வாய் அமையப் பெற்று, குரு போன்ற சுபகிரகப் பார்வை ஏற்பட்டால் அரசாங்கம் சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
11. நிர்வாகத்தைத் தரும் கிரகமாக விளங்குபவர் செவ்வாய் பகவான். செவ்வாய் தைரியம் துணிவுடன் எந்தவொரு செயலையும் சுறுசுறுப்பாகச் செய்ய வழிவகுப்பார். நிர்வாகம் தொடர்புடைய படிப்புகளைப் படிக்கும் யோகம் உண்டாகும்.
- ஆர். எஸ். பாலகுமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.