1. ஜென்மத்தில் குருதான் வந்தால் சிறப்பான பார்வையாலே, பொன்னான மாற்றம் சேரும். புதியதோர் வழி பிறக்கும். தொழிலில் வந்த கவலைகள் பறந்து ஓடும். எந்நாளும் குருவைப் பார்த்தால் எடுத்த செயல் வெற்றியாகும்.
2. இரண்டிலே குரு தான் நின்றால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திரண்டதோர் செல்வம் சேரும். தித்திக்கும் தொழில்கள் வாய்க்கும். வறண்டதோர் வாழ்க்கை மாறி வசதிகள் பெருகும். நிரந்தர யோகம் சேர குருவை நேசிப்பீர்.
3. பொன்னவன் மூன்றில் நின்றால் பொறுப்புகள் அதிகரிக்கும். எண்ணிய காரியங்கள் எல்லாமே வெற்றியாகும். தன்னலம் மாறிப் போகும், தைரியம் வந்து சேரும். மண்ணிலே பதவி வாய்க்கும், மகத்தான வாழ்வும் கூடும்.
4. மன்னவன் நான்கில் வந்தால் மலை போல் துயர் வந்தாலும் கண்ணெதிரில் பனியாய் மாறும். கவலைகள் பறந்து ஓடும்.அன்னியர் ஒத்துழைப்பால் அழகி யதொழில்கள் வாய்க்கும். பொன்னான ஒப்பந்தங்கள் பூமியில் வந்து சேரும்.
5. ஐந்திலே குருதான் வந்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும். பைதனில் பணமும் சேரும். பாராளும் யோகம் வாய்க்கும். வையகம் போற்றும் வண்ணம் வரன்களும் வந்து சேரும். செய்தொழிலில் வளர்ச்சியாகும், செல்வாக்கும்அதிகரிக்கும்.
6. தேவகுரு ஆறில் வந்தால் தேவைகள் பூர்த்தியாகும். ஆவல்கள் தீர வேண்டின் அனுசரிப்பு தேவையாகும். கோபத்தை விலக்கினால்தான்
குடும்பத்தில் அமைதி கூடும். தீபத்தில் குருவைக் கண்டு தரிசித்தால் நன்மை சேரும்.
7. ஏழினில் குருதான் வந்தால் எதிர்காலம் சிறப்பாய் மாறும். வாழ்விலே வசந்தம் சேரும். வருமானம் திருப்தியாகும். சூழ்ந்திடும் பகை விலகும். தொடுத்திடும் மாலை சேரும். கோள்களில் குருவை நீங்கள் கும்பிட்டால் பலன் கிடைக்கும்.
8. எட்டினில் குருதான் வந்தால் இல்லத்தில் தொல்லை கூடும். பெட்டியில் தொகை வைத்தாலும் பிறருக்கே பயனாய் மாறும். திட்டங்கள் மாறிப் போகும், திருப்பங்கள் பலவும் சேரும். வெற்றியைக் காண வேண்டின் விரதத்தைக் கடைப்பிடிப்பீர்.
9. ஒன்பதில் குருவும் வந்தால் ஒப்பற்ற வாழ்க்கை சேரும். பொன், பொருள் அதிகரிக்கும். பூமியால் லாபம் கிட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் யாவும் வந்து கூடும். இன்பத்தின் எல்லை காண இறையருள் கை கொடுக்கும்.
10. ஜீவன ஸ்தானம் தன்னில் செல்கின்ற குருவினாலே ஆவல்கள் பூர்த்தியாகும். ஆன்றோரின் நட்பு கிட்டும். தேவைகள் நடப்பதற்கு
செல்வங்கள் வந்து சேரும். நாவினால் சொல்லும் சொற்கள் நடந்திடும், நன்மை வாய்க்கும்.
11. பதினோராம் இடத்தில் வந்து பார்த்திடும் குருதான் நின்றால், மதிப்பான வாழ்க்கை சேரும். மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். துதிக்கின்ற தெய்வம் தன்னை துணையாக்கிப் பார்த்திருந்தால் விதி கூட மாறிப் போகும். வெற்றிகள் நாளும் சேரும்.
12. இடமது பன்னிரெண்டில் இயல்பாக குருவும் வந்தால் கடமையில் கவனம் தேவை. காசு பணம் விரயமாகும். உடல் நலம் அச்சுறுத்தும், ஊர் மாற்றம் வந்து சேரும். தடம் புரளாமல் வாழ தைரியம் கை கொடுக்கும்.
என்று குருபெயர்ச்சிப் பலன்கள் குறித்து ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.