இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

கல்வி மற்றும் பணி யோகம் எப்படி அமையும்?

ஆர். எஸ். பாலகுமார்.


கடின உழைப்பு, விடா முயற்சியுடன் படிக்கும் மாணவர்கள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை. ஆனாலும், எந்த கல்விப் பிரிவில் நாம் சாதிப்பதற்கான வாய்ப்பு இருப்பது என்பதைக் கணிப்பதில் ஜோதிட சாஸ்திரத்தின் பங்கு மகத்தானதாக இருக்கிறது. உயர் கல்வி பயின்று மருத்துவர் (Doctor), பொறியாளர் (Engineer) என்று பட்டம் பெற்று சம்பாதித்து வளமான வாழ்க்கை வாழ ஜோதிட ரீதியாக என்ன அம்சம் உள்ளது? ஜாதக அமைப்பின்படி என்ன படிக்கலாம்? என்பதை ஜோதிட சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது.

கல்வி யோகம் தரும் கிரகங்கள்

கல்வி, வித்தைக்கு அடித்தளம் அமைக்கும் கிரகம், வித்யாகாரகன் என்று அழைக்கப்படும் புதன் கிரகமாகும். ஜாதகத்தில் புதன் ஏதாவது ஒரு விதத்தில் பலம் பெறுவது அவசியம். பலம் என்பது லக்னத்துக்கு 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் நல்ல கிரக சேர்க்கை பெற்று இருப்பதாகும்.

லக்னத்தில் இருப்பது மிகவும் சிறப்பு. ஆட்சி, உச்சம் பெறுவது மேலும் பலம். உயர்நிலைக் கல்வி வரை லக்னத்துக்கு நான்காம் இடமான கல்வி ஸ்தானத்தைக் கொண்டும், பட்டப்படிப்பு, பட்ட மேல் படிப்புக்கு பாக்ய ஸ்தானம் எனும் ஒன்பதாம் இடத்தைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம். இவை தவிர லக்னம் 2, 5 ஆகிய ஸ்தானங்களும் பலம் பெறுவது அவசியம்.

மருத்துவப் படிப்புகள்

மருத்துவம் படிக்கவும், மருத்துவம் தொடர்பான தொழில்கள் செய்யவும் மருத்துவக் கிரகமான கேது பகவான் அருள் வேண்டும். எண் கணித அமைப்பில் பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 1, 2, 7, 9 என அமைவது சிறப்பு. லக்னத்துக்கு 4, 9, 10 ஆகிய இடங்களில் மருத்துவக் கிரகமான கேது இருப்பது நல்ல யோகம்.

கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பு இருப்பது முதல்தர யோகம். அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறப்பது மருத்துவ யோகத்துக்கு வாய்ப்பாகும்.



பொறியாளர் படிப்புகள்

பொறியாளர் ஆவதற்குப் பிரகாசமான தேதி, கூட்டு எண்கள் 5, 14, 23, 8,17, 26, 9,18, 27 ஆகியவை. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பரணி, பூரம், பூராடம் ஆகியவை பொறியியல் படிக்க சாதகமான நட்சத்திரங்கள். ஜாதகத்தில் சனி, புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தோ, பார்வை பெற்றோ இருப்பது நல்லது. மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம், ராசி மற்றும் லக்னக்காரர்கள் பி.ஆர்க். பாடப்பிரிவில் சேரும் யோகம் உண்டு.

சட்டப் படிப்புகள்

சட்டப் படிப்புக்கு அஸ்திவாரமே லக்னம், லக்னாதிபதி, 2-ம் இடம், 2-ம் அதிபதி, இந்த ஸ்தானம் பலமாக இருப்பது அவசியம். வாக்குகாரகன் செவ்வாய் லக்னத்தையோ, ராசியையோ பார்ப்பது நல்ல அம்சமாகும், இரண்டாம் இடத்தைப் பார்ப்பது சிறப்பாகும். பிறந்ததேதி, கூட்டு எண் 1, 10, 19, 28, 3, 12, 21, 30, 8, 17, 26, 9, 18, 27 ஆகியவை சாதகமானவை. கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் சிறப்பானவை. புதன், குரு லக்னத்தையும் வாக்கு ஸ்தானத்தையும் பார்ப்பது அவசியமாகும். அதன் காரணமாக வாதத் திறமை மேம்படும்.

கணிதப் படிப்புகள்

சந்திரன் பலத்தால் கணக்கு சம்பந்தமான படிப்புகள், ஆடிட்டிங் படிப்பு, பி.காம், எம்.காம், அக்கவுன்டன்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற லக்னம், லக்னாதிபதி சந்திரன் ஆகியவை பலம் பெறவேண்டும். அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை சாதகமானவை.

பிறந்த தேதி மற்றும் கூட்டு எண் 5,14, 23, 4,13, 22, 6,15, 24, 1,10,19, 28 ஆகியவை யோகமானவை. சூரியன், புதன் சேர்ந்து லக்னம், 2, 4, 9, 10 ஆகிய இடங்களில் இருப்பது சிறப்பு.



சமையல் கலை படிப்புகள்

சமையல் கலை படிப்பதற்குச் சூரியன், சந்திரன், செவ்வாய் சாதகமாக இருப்பது அவசியம். 1,10,19, 28, 2,11, 20, 29, 9,18, 27, 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறப்பது சாதகமானது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் பிரகாசமானவை. லக்னத்துக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் இருப்பது, பார்ப்பது நல்ல அம்சம்.

உயர்பதவிகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசு தொடர்பான அதிகாரப் பதவியில் அமர்வதற்குச் சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களின் பலம் அவசியம் தேவை.

1,10,19, 28, 2,11, 20, 29, 4,13, 22, 31, 8,17, 26, 9,18, 27 ஆகிய தேதி கூட்டு எண்ணில் பிறப்பது நல்ல யோகம். மேஷ லக்னம், மேஷ ராசி, மிதுன லக்னம், மிதுன ராசி, கடக லக்னம், கடக ராசி, சிம்ம லக்னம், சிம்ம ராசி, விருச்சிக லக்னம், விருச்சிக ராசி ஆகியவை முதல்தர யோகம் உள்ளவை.

திரைப்படத் துறை

திரைப்படத்துறையில் இயக்குநர் , ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர், ஒலிப்பதிவாளர் போன்ற துறைக்குச் செல்ல பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஏற்றவர்கள்.

பிறந்த தேதி, கூட்டு எண் 1,10,19, 28, 4,13, 22, 31, 6,15, 24, 2,11, 20, 29 ஆகியவை சாதகமானது.

ஆசிரியப் பணி

1,10,19, 28, 4,13, 22, 31, 5,14, 23, 3,12, 21, 8,17, 26 ஆகிய தேதி கூட்டு எண்களில் பிறந்தவர்கள் ஆசிரிய பணி செய்யும் யோகம் உள்ளது. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவை சாதகமானவை.

புதன் லக்னாதிபதியுடன் சேர்ந்தால் கணக்கு ஆசிரியர் ஆகலாம். புதன் சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகலாம். புதன் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் கம்ப்யூட்டர் ஆசிரியராகும் யோகம் உண்டு. சூரியன், சந்திரன் இருந்தால் கல்லூரிப் பேராசிரியர், எழுத்தாளர் ஆகலாம். சந்திரனுக்குக் கேந்திரத்தில் புதன் - குரு இருப்பது ‘வித்யா கெஜகேசரி யோகம்’ எனப்படும். இது இருந்தால் நாம் விரும்புகிற உயர்கல்வியைப் பெற்று அதில் சாதிக்க முடியும்.



கணினிப் பொறியியல்

கணினிப் பொறியாளர் ஆவதற்கு லக்னாதிபதி பலம் மிகவும் அவசியம். பிறந்த தேதி - கூட்டு எண் ஆகியவை 1, 10,19, 28, 2,11, 20, 29, 5,14, 23, 6,15, 24 என இருப்பது சாதகமானதாகும். லக்னம் 4, 9,10 ஆகிய இடங்களில் ராகு இருப்பது நலம் தரும். அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சாதகமானவை. நான்காம் அதிபதியுடன் புதன் - ராகு சேர்க்கை பெறுவது நல்ல அம்சமாகும். புதன் லக்னம் 4, 5, 7, 9,10 ஆகிய இடங்களில் இருப்பது மிகப்பெரிய பலமாகும்.

தோல்விக்கு காரணமும் கிரகங்களே

கல்வியில் தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புக்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. நீச்ச கிரக திசாபுக்திகளும் 6, 8, 12 ஆகிய கிரக திசை புக்திகளும், பலம் குறைந்த நீச்ச கிரக சேர்க்கை பெற்ற ராகு-கேது திசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும்.

புதன் நீச்சமாகியோ 6, 8, 12ல் மறைந்தோ திசை வந்தால் கல்வியில் தடை ஏற்படுகிறது. படிப்பில் நாட்டம் செல்லாமல் தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம் உண்டாகும்.

படிக்கும் காலத்தில் 6, 8, 12 ஆகிய கிரக திசைகள் வந்தால் மறதி அதிகரிக்கும். எட்டாம் அதிபதி நான்காம் அதிபதியுடனும், சனி, செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று திசை வந்தால் திடீர் தடைகள் ஏற்படலாம்.

லக்னம் 5, 7, 8-ம் இடங்களில் சந்திரன் - சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் திசாபுக்திகளால் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டுக் கவனம் தடுமாறும். சுக ஸ்தானாதிபதியாகிய நான்காம் அதிபதியுடன் நீச்சக் கிரகச் சேர்க்கை பெற்ற திசாபுக்திகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்வித்தடை ஏற்படலாம்.

சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை, நீச்ச கிரக திசாபுக்திகள், ராகு-கேதுக்கள் ராசிக்கு 2, 4, 7, 8, 10 போன்ற ஸ்தானங்களில் வருவது, சனிப்பெயர்ச்சி காரணமாக 4ல் சனி, ஏழரை சனி, அஷ்டமச்சனி நடப்பது ஆகியவையும் கல்விக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, மேலும் அதிக சிரமப்பட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

வழிபாடு, பரிகாரங்கள்

  • செங்கல்பட்டு அருகில் உள்ள செட்டிபுண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவ தலங்கள். இங்கு சென்று வழிபட்டால் கல்வித் தடைகள் நீங்கும்.

  • புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். திருக்கடையூர் அபிராமி அம்மனைத் தரிசித்து பிரார்த்திக்கலாம். தினமும் காலையில் விநாயகர் அகவல் படித்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். ஞானத்தையும், பல்வேறு கலை, கல்விகளில் தேர்ச்சியையும், அறிவாற்றலையும் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று வணங்கலாம்.

  • திருவொற்றியூரில் ஞான சக்தியாக அருளும் வடிவுடையம்மனை பவுர்ணமி அன்று தரிசித்து வழிபடலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை வணங்கலாம். கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும்.

  • ராகு, கேது அருளால் டாக்டர் ஆகலாம்.

  • கிரக சாதகங்கள்

    நம் ஜாதக அமைப்பில் எந்த கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன என்பதைக் கொண்டு, நமக்கு எந்த உயர்கல்வி அமையும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    சூரியன்

    நிர்வாக படிப்புகள், எம்பிஏ, தத்துவ பாடங்கள்

    சந்திரன்

    மருத்துவம், வேதியியல், தண்ணீர், கப்பல் சார்ந்த படிப்புகள்

    செவ்வாய்

    அறுவை சிகிச்சை, விவசாய படிப்பு, கட்டுமானப் பொறியியல்

    புதன்

    கணக்கு, வங்கி, காப்பீடு, கணக்காளர், கணினிப் பொறியியல்

    குரு

    இலக்கியம், வானியல், சட்டம், ஆசிரியர்

    சனி

    வரலாறு, கனிமங்கள், இயந்திரப் பொறியியல்

    ராகு

    சினிமா, ஊடகம், சித்தா, ஆயுர்வேத மருத்துவம், தொழில் துறை

    கேது

    மருத்துவம், சாத்திர படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள்.




    இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

    இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p25.html
    

      2024
      2023
      2022
      2021
      2020
      2019
      2018
      2017


    வலையொளிப் பதிவுகள்
      பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

      எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

      சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

      கௌரவர்கள் யார்? யார்?

      தமிழ் ஆண்டுப் பெயர்கள்

      பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

      வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

      பண்டைய படைப் பெயர்கள்

      ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

      மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

      மரம் என்பதன் பொருள் என்ன?

      நீதி சதகம் கூறும் நீதிகள்

      மூன்று மரங்களின் விருப்பங்கள்

      மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

      மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

      யானை - சில சுவையான தகவல்கள்

      ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

      நான்கு வகை மனிதர்கள்

      தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

      மாபாவியோர் வாழும் மதுரை

      கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

      தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

      குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

      மூன்று வகை மனிதர்கள்

      உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


    சிறப்புப் பகுதிகள்





    முதன்மைப் படைப்பாளர்கள்

    வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


    சிரிக்க சிரிக்க
      எரிப்பதா? புதைப்பதா?
      அறிவை வைக்க மறந்துட்டானே...!
      செத்தும் செலவு வைப்பாள் காதலி!
      வீரப்பலகாரம் தெரியுமா?
      உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
      இலையுதிர் காலம் வராது!
      கண்ணதாசனின் நகைச்சுவைகள்
      குறைச்சுத்தான் எடை போடறாரு...!
      அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
      குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
      இடத்தைக் காலி பண்ணுங்க...!
      சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
      மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
      மாபாவியோர் வாழும் மதுரை
      இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
      ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
      அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
      ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
      கவிஞரை விடக் கலைஞர்?
      பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
      கடைசியாகக் கிடைத்த தகவல்!
      மூன்றாம் தர ஆட்சி
      பெயர்தான் கெட்டுப் போகிறது!
      தபால்காரர் வேலை!
      எலிக்கு ஊசி போட்டாச்சா?
      சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
      சம அளவு என்றால்...?
      குறள் யாருக்காக...?
      எலி திருமணம் செய்து கொண்டால்?
      யாருக்கு உங்க ஓட்டு?
      வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
      கடவுளுக்குப் புரியவில்லை...?
      முதலாளி... மூளையிருக்கா...?
      மூன்று வரங்கள்
      கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
      நான் வழக்கறிஞர்
      பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
      பொழைக்கத் தெரிஞ்சவன்
      காதல்... மொழிகள்
    குட்டிக்கதைகள்
      எல்லாம் நன்மைக்கே...!
      மனிதர்களது தகுதி அறிய...
      உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
      இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
      அழுது புலம்பி என்ன பயன்?
      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
      கடவுளைக் காண உதவும் கண்ணாடி
      தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
      உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
      ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
      அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
      கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
      எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
      சிங்கத்திற்கு வாழைப்பழம்!
      வலை வீசிப் பிடித்த வேலை
      சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
      இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
      கல்லெறிந்தவனுக்கு பழமா?
      சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
      வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
      ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
      அக்காவை மணந்த ஏழை?
      சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
      இராமன் சாப்பாட்டு இராமனா?
      சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
      புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
      பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
      தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
      கழுதையின் புத்திசாலித்தனம்
      விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
      தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
      சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
      திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
      புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
      இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
      ஆணவத்தால் வந்த அழிவு!
      சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
      சொர்க்க வாசல் திறக்குமா...?
      வழுக்கைத் தலைக்கு மருந்து
      மனைவிக்குப் பயப்படாதவர்
      சிங்கக்கறி வேண்டுமா...?
      வேட்டைநாயின் வருத்தம்
      மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
      கோவணத்திற்காக ஓடிய சீடன்
      கடவுள் ரசித்த கதை
      புத்தர் மௌனமாக இருக்கலாமா?
      குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
      சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
      தேங்காய் சிதறுகாயான கதை
      அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
      அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
      கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
      சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
      அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
      விமானத்தில் பறந்த கஞ்சன்
      நாய்களுக்கு அனுமதி இல்லை
      வடைக்கடைப் பொருளாதாரம்
    ஆன்மிகம் - இந்து சமயம்
      ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
      தானம் செய்வதால் வரும் பலன்கள்
      முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
      பிரதோஷம் எப்படி விஷேசமானது?
      விநாயகர் சில சுவையான தகவல்கள்
      சிவராத்திரி விஷேசமானது ஏன்?
      முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
      தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
      கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
      எப்படி வந்தது தீபாவளி?
      தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
      ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
      ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
      அனுமனுக்கு வடை மாலை ஏன்?
      திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
      விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
      கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
      சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
      முருகா என்றால் என்ன கிடைக்கும்?
      குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
      விபூதியின் தத்துவம்
      கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
      தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
      கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
      இறைவன் ஆடிய நடனங்கள்
      யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
      செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
      கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
      விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
      இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
      நவராத்திரி பூஜை ஏன்?
      வேள்விகளும் பலன்களும்
      காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
      பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
      அம்பலப்புழா பால் பாயாசம்
      துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
      சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
      ஈசன் உபதேசித்தத் தலங்கள்
      பரமபதம் விளையாட்டு ஏன்?
      வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
      பதின்மூன்று வகை சாபங்கள்
      இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
      சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
      பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
      சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
      உணவு வழித் தோசங்கள்
      திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
      மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
      பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
      நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
      சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
      மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
      இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
      பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
      கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
      அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
      தீர்க்க சுமங்கலி பவா


    தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                         


    இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
    Creative Commons License
    This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License