வீடுகள் செல்வச் செழிப்புடன் இருக்கக் கீழ்க்காணும் செயல்களைச் செய்திடல் வேண்டும் என்று இந்து சமயப் புராணங்கள் வலியுறுத்துகின்றன. அவை;
1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டுத் தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
2. வீட்டில் வெள்ளைப் புறாக்களை வளர்க்கப் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
3. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஒரு ஊறுகாய்ப் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்கக் குபேர சம்பத்து வரும்.
4. வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்தத் தரவும், பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
5. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபடப் பணம் வரும்.
6. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.
7. இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
8. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து குடும்பத்தினருடன் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
9. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.
10. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
11. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் . இப்படி 45 நாட்கள் விடாமல் செய்திடத் தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
12. முழுப் பாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்துப் பின் அதனை மறுநாள் பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனைத் தொடர்ந்து செய்து வரப் பணத்தடை நீங்கும்.
13. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்குப் பசும் பால் வழங்கிடப் பணம் வரும். பச்சைவளையலைத் தாயாருக்கு அணிவித்திடப் பணம் வரும்.
14. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியத் தனப்ராப்தி அதிகரிக்கும்.
15. பசும்பாலைச் சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சயமாகப் பணம் வந்து சேரும்.
16. பாசிப்பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டையாகக் கட்டித் தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு தேவையற்ற பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விட்டால் பணப்பிரச்சனை தீரும்.
17. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவிச் சிறிது நேரம் சென்று குளிக்கத் தரித்திரம் விலகும்.
18. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும். தரித்திரம் விலகும்.
19. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை ஏழுமலையானைத் தரிசிக்கப் பணக்காரராக முடியும்.
20. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கிப் பணப்பெட்டியில் வைக்கப் பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
21. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
22. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
23. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபட வசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
24. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.
25. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளித் தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
26. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்யச் செல்வங்களைப் பெறலாம்.
27. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடச் செல்வம் பெருகும்.
28. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குச் சொர்ணாகர்ஷன பைரவருக்குத் தாமரை மாலை அணிவித்துப் பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபட சொர்ண ஆகர்ஷணமாகும்.
29. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்ச்சித்து, வில்வ மாலை அணிவித்திடப் பணம் குவியும்.
30. ஐஸ்வர்ய தூபப் பொடியுடன், துளசிப் பொடியும் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போடச் செல்வம் குவியும்.
31. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிடச் செல்வம் குவியும்.
32. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்கச் செல்வம் சேரும்.
33. மகாலட்சுமியைக் கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்ச்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
34. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து, இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடச் செல்வம் சேரும்.
35. சுக்ர ஓரையில் மொச்சைப் பயிர் வாங்கிடச் செல்வம் சேரும்.
36. சொர்ணாகர்ஷன பைரவருக்குத் தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திடப் பணம் சேரும்.
37. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.
38. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்துத் தானம் அளித்திட லஷ்மிஅருள் முழுமையாகக் கிட்டும்.
39. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் செய்யுமிடத்திலும் தெளிக்க செல்வம் பெருகும்.
40. ஆந்தை படத்தினைத் தொடர்ந்து பார்த்து வரப் பணம் ஆகர்ஷணமாகும்.
41. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாசலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திடப் பணம் கிடைக்கும்.
42. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாகத் தங்கும்.
43. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிடத் தொடர்ந்து 9 வாரம் செய்து வரக் குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
44. குபேரனுக்குத் தாமரைத் திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.
45. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வரக் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
46. திருமலை வெங்கடாசலபதிக்கு வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.
47. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனைப் பூஜை செய்து வர தீமைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.
48. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம் கிட்டும்.
49. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும்.
50. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்ச்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளமும் கிட்டும்.
51. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சைப் பட்டில் வைத்து மடித்துப் பணப்பெட்டியில் வைக்கப் பணம் சேரும்.
52. சம்பாதிப்பதில் ஒரு தொகையைச் சேர்த்து அதனை அன்னதானத்திற்குச் செலவிட அதனைப் போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.
53. ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தைப் பெற்று, அதனைத் தினமும் அணிந்து வர பணம் வரும்.
54. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்கத் தனலாபம் கிட்டும்.
55. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிப் பணப்பையில் வைக்கப் பணம் ஆகர்ஷணம் ஆகும்.
56. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேத பண்டிதர்களைக் கொண்டு செய்ய லஷ்மி கடாடசம் நிரந்தரமாகும்.
57. ஸ்ரீ ஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூப ஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கித் தனலாபம் பெறலாம்.
58. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டும் வரப் பணம் கிடைக்கும்.
59. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து, அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்களும் விலகிக் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
60. மகாலட்சுமிக்குப் பச்சை பட்டினை அணிவித்து வணங்கப் பணம் வரும்.
61. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்ச்சித்து வணங்கத் தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
62. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டித் தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.
63. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி. வெள்ளிக்கிழமை தோறும் 24 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபாட்டால் பணம் கிடைக்கும்.
64. தனபண்டாரக் குபேரனை வழிபடப் பணம் தடையின்றி கிடைக்கும்.
65. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழப் பணம் கிடைக்கும்.
66. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.
67. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன், மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபடச் செல்வம் கிடைக்கும்.
68. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடப் பணம் கிடைக்கும்.
69. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ர ஓரையில் பாராயணம் செய்யப் பணம் வரும்.
70. குல தெய்வத்தைத் தினம் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபடப் பணம் வரும்.
71. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகளாகப் பணம் வரும்.
72. திருப்பதி வெங்கடாசலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபடப் பணம் வரும்.
73. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
74. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க அதிகமான பணம் கிடைக்கும்.
75. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளை வழிபடத் தங்க நகைகள் கிடைக்கும்.
76. ஜோடியாக இருக்கும் கழுதைப் படம், ஓடும் வெள்ளைக் குதிரை படம் போன்றவற்றை அடிக்கடிப் பார்க்கப் பணம் வரும்.
77. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்கப் பணம் குறையாது.
78. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
79. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடப் பணம் வரும்.