நவக்கிரக தோசங்களுக்குச் செய்ய வேண்டிய வழிபாடு குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...
சூரிய பகவான்
ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம், சிவப்பு மணி, செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் சூரியக் கிரக தோசம் நீங்கும்.
சந்திர பகவான்
திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம், முத்துமாலை, வெள்ளை அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சந்திர மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் சந்திரக் கிரக தோசம் நீங்கும்.
அங்காரக பகவான்
செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம், பவழம், சிவப்பு அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து, அங்காரக மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் அங்காரக கிரக தோசம் நீங்கும்.
புதன் பகவான்
புதன்கிழமையில் அபிஷேகம் செய்து, பச்சை வஸ்திரம், மரகமணி, வெண்தாமரை ஆகியவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் புதன் கிரக தோசம் நீங்கும்.
குரு பகவான்
வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் குருக் கிரக தோஷம் நீங்கும்.
சுக்கிர பகவான்
வெள்ளிக் கிழமையில் அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம், வைரக்கல், வெண்தாமரை மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் சுக்கிரக் கிரக தோசம் நீங்கும்.
சனி பகவான்
சனிக்கிழமையில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல், நீலோற்பலம் (கருங்குவளை) ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சனி பகவானின் மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆர்த்தி எடுத்தால் சனிக்கிரக தோசம் நீங்கும்.
ராகு பகவான்
ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், கோமேதக மணி, நீலமந்தாரை, இலுப்பைப்பூ ஆகியவற்றால் அலங்காரம் செய்து, ராகு மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் ராகுக் கிரக தோசம் நீங்கும்.
கேது பகவான்
ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, பலவர்ண ஆடை, வைடூர்ய மணி, செவ்வல்லி மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து, கேது மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் கேதுக் கிரக தோசம் நீங்கும்.