ஆந்தை பஞ்ச பட்சியில் ஒன்று. இப்பறவையின் முகம் உருண்டும், கண்கள் திரண்டும், தலை பருத்தும், இறகுகள் தடித்தும், நகங்கள் வளைந்து கூராகவும், கபில நிறமாவும், உள்ளது. இது பகலெல்லாம் மரப்பொந்து, பாழிடங்களில் தூங்கி இரவில் இரை தேடப் புறப்படும். நிறம் கபிலம். எலி, பூச்சிகள் முதலியவற்றை உணவாகக் கொள்கிறது.
இந்த ஆந்தையின் அலறல் எனப்படும் ஆந்தை கூவும் ஒலியினைக் கொண்டு சுப அசுபங்களை அறியலாம் என்கிறது அகவல் பா... ஒன்று.
* ஓருரை உரைக்குமாகில் உற்றதோர் சாவு சொல்லும்.
* ஈருரை உரைக்குமாகில் எண்ணிய கருமம் நன்றாம்.
* மூவுரை உரைக்குமாகில் மோகமாய் மங்கை சேர்வாள்.
* நான்கு உரை உரைக்குமாகில் நாழிகையில் கலகங் சொல்லும்.
* ஐயுரை உரைக்குமாகில் அங்கொரு பயணம் சொல்லும்.
* ஆறுரை உரைக்குமாகில் அடுத்தவர் வரவு கூறும்.
* ஏழரை உரைக்குமாகில் இறந்த பண்டங்கள் போதும்.
* எட்டுரை உரைக்குமாகில் திட்டெனச் சாவு சொல்லும்.
* ஒன்பதும், பத்தும் ஆகில் உத்தமம் மிகவும் நன்றே.